பக்கங்கள்

சுத்த மருத்துவம்

மதுரையில் வசிக்கும் டாக்டர் கண்ணன் அவர்களின் கருத்துப்படி உடலில் உண்டாகும் நோய்களுக்கு காரணம் உடலின் வெப்பநிலை சீராக இல்லாததே காரணம். அதாவது உடலில் வெப்பம் உருவாகுவதும் வெளியேறுவதும் சீராக நடைபெறவேண்டும். இதில் வெப்பதேக்கம் உருவாகும்போது அது எந்த இடத்தைப் பாதிக்கிறதோ அந்த உடல் உறுப்பில் ஒரு பிரச்னை ஏற்படுகிறது. அதற்கு ஒரு பெயர் வைத்து நோய் என்கிறோம். அந்த வெப்ப தேக்கத்தை சரிசெய்தால் நோய் குணமாகி விடும் என்கிறார். இந்த மருத்துவ முறைக்கு சுத்த மருத்துவம் எனப் பெயரிட்டுள்ளார்.



அவருடைய வழிமுறைகள் மிக சுலபமானது. அவருடைய ஆலோசனையின்படி நடந்து பலன் அடைந்துள்ளேன். எனவே அனைவரும் பலனடைய வேண்டும் என்று சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.



முதலில் அவரால் நான் பெற்ற சந்தோஷ அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

என் துணைவியாருக்கு சிக்குன்குனியா நோய் வந்தபின் திடீரென்று ஒரு நாள் வாந்தி ஏற்பட்டது. தண்ணீர்கூட வயிற்றில் தங்கவில்லை. வேறு வழியில்லாமல் அலொபதி மருத்துவரிடம் சென்றோம். மருத்துவர் இரண்டு பாட்டில் குளுகோஸ் ஏற்றி விட்டு மருந்து மாத்திரைகள் கொடுத்து 350 ரூபாய் பெற்றுக்கொண்டார். வீட்டிற்கு வந்தபின் ஒரு மணி நேரத்தில் மீண்டும் வாந்தி வர ஆரம்பித்தது. நேரமோ இரவு 10 . டாக்டர் கண்ணன் அவர்களை தொடர்புகொண்டு பிரச்னையைக் கூறினேன். அவர் இரண்டு வாளி வென்னீர் வைத்து மிதமான சுட்டில் இடுப்புக்குளியல் அதாவது தொப்புளுக்கு கீழ் உடலைச்சுற்றி மனைப்பலகையில் உட்கார்ந்து மிதமான சுட்டில் வென்னீர் விடச்சொன்னார். அப்போது ஏப்பம் வரும். அப்படி ஏப்பம் வந்துவிட்டால் சரியாகிவிடும் என்றார். மேலும் உண்பதற்கு எதுவும் கொடுக்காமல் பனங்கற்கண்டைச் சுவைக்க சொன்னார். என்ன ஆச்சரியம் உடனடியாக வாந்தி நின்றுவிட்டது. அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவு இல்லை. இது போல் பலரும் பலனடைந்துள்ளார்கள்.







கருத்துகள் இல்லை: