பக்கங்கள்

30 அக்டோபர், 2016

விஷக்கடி,நஞ்சுகள்(BITES,POISONS)


கண்டுகொள்வாய் சொல்லுகின்றேன்   
உலகோர்க் கெல்லாம் காரமா மூலியடா   
பங்கம்பாளை கொண்டு. வந்து உன் 
மனையில் வைத்திருந்தால் கொடிய 
விடம் அணுகாது குடியோடிப்போம்  
 நன்றானநாகதாளிக்கிழங்கு  தானும் 
 நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா 
அன்றான ஆகாசகருடன் மூலி 
 அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்
                                                - சித்தர் பாடல்.                
                    தெரிந்துகொள்ளுங்கள்:       
 பாம்புகள் கடல்பாம்புகள்,எலாபிட்டுகல் என்று 2வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.                                            
எலாபிட்டுகல் வகையை சேர்ந்தவையே நல்லபாம்புகள்..எல்லாவற்றிற்கும் ஒரே வகையான விஷமே. விரியன்,வழலை,பனசை,புடையன்,ஓலைபாம்பு போன்றவை நல்லபாம்பை விட விஷம் குறைந்தவையே.விஷதன்மையை பொறுத்து 2 வகையாக பிரிக்கப்படுகின்றன.                                                                             
 நல்லபாம்பு வகை (colubrine) ,         விரியன்வகை (Viprane)                                                                                                                                                     
அறிகுறிகள்;                                                                                                          நல்லபாம்புகடித்தால்;    
நஞ்சு நரம்புகளின் மீது வேலை செய்யும்.                                                                                                   
  1.அந்தஇடத்தில் எரிச்சல்,திமிருண்டாகும்.                                                                                   
 2.வாய்க்  குமட்டல்                                                                                                        3.நடைதடுமாறல்                                                                                                                                          4.பேசமுடியாமை                                                                                                               5.மயக்கம்.                                                                                                                                                             6.எச்சில் பெருகி வழியும்.                                                                                                                            7.அறிவு மயங்கி வாயிலும்,மூக்கிலும் நுரை வரும்.                                                                                   8.மூச்சு குறையும்.                                                                                                                        
 9.மூச்சடைப்பும், மரணமும்.                                                                                                       
  விரியன்வகை                                                                                                         
 நஞ்சு நேரிடையாக இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் தாக்கும்.             
1.கடிவாயில் விடாத எரிச்சல்                                                                                                     
2.கடிவாயில் ஓயாத இரத்தப்பெருக்கு                                                                                                                   3. கடிவாயைச் சுற்றி சதை வீங்கி,நீலநிறம்.                                                 

 4.இரத்த உறையும் தண்மை குறைதல்                                                    
 5.வாய்,மூக்கு,இரைப்பையில்  இரத்த ஒழுக்கு                                                                            
 6.சிறுநீரில் இரத்தம்.                                                                                                                                      
 7.இரத்த அழுத்தம் குறைதல்.                                                                                                                 
 8.இருதய அடைப்பு, மரணம                                                                                   பரிசோதனைகள்;                                                                                                                                 
 1.சிறிது மிளகை மென்று தின்ன,காரம் தோன்றவில்லையானால் விஷம் ஏறி உள்ளது                                                  
 2.ஆடுதீண்டாப்பாளை வேரை மெல்லவும்.    
  இனித்தால் நல்லபாம்பு.                                                                                       உப்புகரித்தால் விரியன்.                                                                                        துவர்த்தால் வழலை.                                                                                                         கசந்தால் விஷம் இல்லை.   
இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு,
தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு,
உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு,
மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,
கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு,
காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு,
புளிப்பு -வழலைப் பாம்பு,
புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு,
முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு,
நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு,
நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு,
கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு                                                     
பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.                                               பச்சைப்பாம்பு  கடிக்காது,ஆனால் தன் கூறிய மூக்கினால் கண்ணைத் தாக்கும்.                       குறிப்புகள்;                                                                                                                             இரை உண்ட பாம்பு கடித்தால் விஷம் இருக்காது.                                                                சாரைப்பாம்பு  விஷம்  வெளியேற்றப்பட்டிருந்தால் ஒருவாரத்தில் 10% விஷமே இருக்கும்.                                                                                                                                                                            
 நச்சுப்பல்  இரத்தக்குழாயை கிழித்து விஷத்தை செலுத்தினால் மட்டுமே அபாயம். இது அபூர்வம்.                                                                                                                                              
 1 பல் பட்டால் கால்கடி ;புள்ளடி போலிருக்கும். பனிநீர்போல நீர் கசியும். விஷம் தோலைப் பற்றி ஏறும்.                                                                                                                 
 2 பல் பட்டால் அரைக்கடி;முக்கோணம் மாதிரி இருக்கும்.மஞ்சள்  நிறநீர்  கசியும். மாமிசத்தைப் பற்றி ஏறும்.                                                                                                                   
 3 பல் பட்டால் முக்கால்கடி;முள்தைத்த கீற்றுபோல் இருக்கும்.செந்நீர் கசியும். எலும்பை  பற்றி  ஏறும்.                                                                                                                     4 பல் பட்டால் முழுக்கடி;வில் போலிருக்கும்.கழுநீர்போல் கசியும்.மூளையை பற்றி ஏறும்.                                                                                                                                                                                                                        தேள்;                                                                                                                 
 கருந்தேள்;கரேலென்று பளபளப்புடன் இருக்கும்.                                       வீட்டுத்தேள்;இலேசான மஞ்சள்,சிகப்பு,கறுப்பு  நிறங்களுடன் இருக்கும்.             மரத்தேள்; மரஙகளின் நிறத்திற்கேற்ப மரங்கள், மரப் பொந்துகளில்  இருக்கும்.               
 வயல்தேள்;நண்டின் முன்னங் கால்களை போல் அகலமான முன்னங்கால் கொண்டிருக்கும்.                                                                                                                               ஜலமண்டலத்தேள்;2 க்க வரிசையிலும் ஊசி போன்ற கால்கள்; தரை மட்டமான வால்; வேகமாக ஓடும். நீர் நிலைகளில் காணும்.                                        
உச்சிலிங்கத்தேள்; பகலில் கொட்டும்.கடிவாயில் வீக்கம்,நரம்புகளில் வேதனை, ரோம சிலிர்ப்பு உண்டாகும்.                                                            வாதத்தேள்;மார்பு,எலும்பு,நரம்புகளில் அதிகவலி,சரீரம் கருமையாதல், கூச்சல், புரளுதல்,  மேல்மூச்சு உண்டாகுதல் தோண்றும்                                 பித்தத்தேள்;கடுமையான மூச்சு வாங்குதல்,வாய் காரமாயிருத்தல்,முகத்தில் எண்ணைப்பசை வழவழப்பு உண்டாகுதல்,அறிவுமயங்குதல்,பீதி உண்டாதல், 24மணி நேரம் அவஸ்தை உண்டாதல் தோன்றும்.                         
சிலேஷ்மதேள்;வாயில் நீர் ஊறல்,வாந்தி,மார்பு அதிர்ச்சி,அரோசிகம்,உடல் முழுதும் வாழைத்தண்டை போல் குளிர்ச்சி,இனிப்புச்சுவை தோன்றும்.                   நட்டுவாக்காலி;  தேள் இனத்தைச் சேர்ந்தது.தேளைவிட பருமனாக,7 -15 அங்குலம் வரை இருக்கும்.கரிய நிறம்.பாழடைந்த வீடு,தோட்டம், சந்து பொந்துகளில் காணும். நன்றாக பிடித்தபின்பே கொட்டும். கடுமையான கடுப்பு,வலி,ஆயாசம்,மயக்கம், வாயில் நுரை தள்ளுதல் உண்டாகும். கொட்டுவாயில் புண்,வீக்கம் உண்டாகும்.                            முதலுதவிகள்;                                                                                                                 
 1.பாம்பு,தேள் கடித்தால் கடிவாயின்மேல் இறுக்கமாக கட்டி இரத்தஓட்டத்தை தடை செய்யவும்.2 மணி நேரம் தடைசெய்தால் விஷம் மேலே ஏறாது.                     
 2.வாழைச்சாறு கொடுக்க உடனே விஷம் இறங்கும்.                                                       
 பூரான்;   (100 கால் பூச்சி)       5-7 அங்குலம் நீளமுடையது.கடித்த 2நாட்களுக்கு பின்னே தடிப்பு,அரிப்பு தோன்றும்.அமாவாசை தினங்களில் அதிகம் தடிப்பு எரிச்சல் காணும்,                                                                                                                          
 செய்யான்; பூரானைப் போன்று பெரியது. 8-12 அங்குலம் உள்ளது. பெரும்படைச்செய்யான், மருட்சிச்செய்யான்,  பட்டைச்செய்யான் என பல வகை உண்டு. பூரானைவிட சற்று அதிக வீரியம் உடையது.                            
எலி;    18 வகை உள்ளது.                                                                                                                       
 1.புங்கவன்;    கடித்தால் கைகால்களில் எரிச்சல்,கண்களில் கருமை,சோகம் உண்டாகும்.          
 2.உத்தமன்;காது மத்தியமாகும்.கண்ணொளி மங்கும்.துன்பம் அதிகரித்து, கருநிறமாகும், வீங்கும்.                                                                                                          
 3.புரந்தரி;தேகம் கருக்கும், தளர்ச்ச்சி.கடிவாயில்கடுப்பு,வலியுடன்,காரத்தை வைத்தது போல் எரிச்சல் 5நாள் இருக்கும்.                                             
 4.சுண்டெலி;   கடிவாயிலிருந்து ஊண் தண்ணீர் பொசியும்.கடிவாய் வட்டமாக ஆகும்.                                                                          
 5. அருணன்;இருமல்,ஈளை,மேல்சுவாசம் உண்டாகும்.கால்கள்,உடல் முழுதும் கடுப்பு, வலி ஏற்படும். அடிக்கடி மயக்கம் உண்டாகும்.                        
 6.குலமந்திரி;சரீரம் முழுதும் வியர்த்து நீர்க் கொட்டும்.நமைச்சல் உண்டாகும்.                  
 7. பாண்டுபுத்திரி;கொப்புளங்கள் உண்டாகும்.கடுப்பு,வலி காணும்.                8.விருங்கன்;உடலில் எரிச்சல்,காது செவிடு உண்டாக்கும்.               9.புண்டரகன்;உடலில் வீக்கம்,உணவு சீரணிக்காமல் வாந்தி,முகம் சிவத்தல், நா உலர்தல், ஆயாசம் தோண்றும்.  
 10.அரா;உடல் வீங்கும்.எச்சில் ஒழுகும்,ஆயாசம் உண்டாகும்.    
11.கடைப்பல்லன்;பற்கள் விழுந்து உதடு தடிக்கும்.மயக்கம் உண்டாகும்.  12.பன்றிமூக்கன்;கை விரல்கள் வீங்கும்,மூக்கிலிருந்து நீர் பொசிந்து கொண்டே இருக்கும்.                                                        13.செங்கோடன்;வயிற்றில் வலி,வயிறு பொருமி கழிச்சல்,கண்வலி உண்டாகும். 14.கருவால்;உடல் கடுகடுப்புடன்,உதடு,சரீரம்,நகங்கள் உட்பட கருநிறமடையும்.            15.சதங்கை வாயெலி;சரீரத்தில் எரிச்சல்,வீக்கம்,கடுகடுப்பு உண்டாகும். நிலத்தில் புரண்டு பற்களை அடிக்கடி கடிப்பான். 
 16.அட்டைமூஷிகம்;வெடிப்புகள் உண்டாகும்.கோழைகட்டும்.தலை முடி உதிரும்.                                                                  
 17.செந்தலை;தாங்க முடியாத எரிச்சல் காணும்.அரிப்பு உண்டாகி தடிக்கும். அதிலிருந்து துர்நீர் கசியும்.                                    
 18.அரணைவாலெலி;சரீரத்தில் எரிச்சல்,சுள்சுள்ளென்ற அரிப்பு,சதா உமிழ்நீர் சுரத்தல், ஆயாசம் காணும்.                                             19.பெருச்சாளி;கடிக்காது,உடனே மருந்து கொள்ளாவிட்டால் ஆஸ்துமா,ஈளை, இழுப்பு உண்டாகும்.மருந்துக்கு வசமாகா.                                                          
 நாய்;   எஜமானரின் மனநிலையால் பாதிக்கப்பட்டு வெறி பிடிக்கிறது.தை, மாசி மாதங்களில் அதிகரிக்கும்.சருமம் அறுபட்டு,அடியில் ஜவ்வுகளோடு வைரஸ் கலந்து நோய் முதிரும்.                                                                         
பூனை; தொந்தரவு செய்தால் கடிக்கும்.புண்ணாகி கடுக்கும்.நாளானால் மயக்கம்,ஜுரம், இருமல்,ஈளை,காசம் உண்டாகும்,பூனைபோல் கத்தி சீறுவார்கள்.       
 அரனை;கடிவாயில் வெள்ளை நிற நுரை வரும்.உடல் முழுதும் நடுக்கம் உண்டாகும். நாக்கு தடித்து பேச்சு வராமல் வாய் குளறும்.                                   சிலந்தி;விஷம் இரத்தத்தில் கலந்து ஊறி உருண்டையான கட்டிகளாக வெளி வரும். வேதனை உண்டாகும்.                                                          
ஓணான்; பிறையைப்போல் காயமுண்டாகும்.வீக்கம்,குத்தல்,ஆயாசம் காணும் .
ஓணான் எந்த நிறமாயிருக்கிறதோ அதே நிறத்தில் பேதியாகும்.                    
தவளை;   நீர் மேலேபட்டால் தாங்கமுடியாத சொறி உண்டாகும். சொறியும்போது புண்ணாகி நீர் கசியும்.கடித்தால் சோம்பலான நித்திரையும், கறுத்து பரவுகின்ற சொறி உண்டாகும்.அழகு கெடும்.                             
பல்லி;வியர்வை,வீக்கம்,எரிச்சல்,பொடிச்சிரங்குகள் உண்டாகும்.அதிக ஆயாசம் காணும்.                                                                              
 வண்டு; (கானாக்கடி) இரத்தத்தில் விஷம்  கலந்த பிறகு வட்ட வட்டமாக தடிப்புகள் தோண்றும்.அரிப்பு எடுக்கும்.                                                           
 தென்னை மரவண்டு;கருநிறமாய் இருக்கும்.                                          ஆறுபுள்ளி வண்டு;மஞ்சள் நிறமாய் இருக்கும். உடம்பு கரு நிறமாகி,மஞ்சளாகி வீங்கி தடிக்கும்.                                                                        குரங்கு;  கடிவாயில் இரத்தம் வரும்.  கடுகடுப்பு,எரிச்சல்;வீக்கம் அதிக ஆயாசம் உண்டாகும்.                                               குதிரை;வீக்கம்,வலி,கடுகடுப்பு,வேதனை,தலைவலி,ஜுரம்,குளிர் உண்டாகும்.       மரவட்டை;உடல் தடித்தல்,வியர்வை,வீக்கம்,வேதனை,பொடிப்பொடியான சிரங்குகள் தோன்றும்.                                   கம்பளிப்பூச்சி;நமைச்சல்,சொறி,வீக்கம்,கொப்புளம்,ஆயாசம் உண்டாகும். சிலருக்கு ஜுரம்,வாந்தி  உண்டாகலாம்.                                                
 மனிதன்;  தற்காப்புக்கடி; கடிவாயில் கடுகடுப்பு,எரிச்சல்,தலைவலி,சரீர ஆயாசம் உண்டாகும்.                                                        
 வெறிக்கடி;வாயில் நுரை தள்ளும்,வியர்வை பெருக்கெடுத்து ஓடும்.                                                                                  சிறுகுறிஞ்சான் வேர்சூரணம் 1தேகரண்டி சாப்பிட வாந்தியுண்டாகி,நஞ்சு வெளியேறும்
2.   வெள்ளருகு சமூலத்தை இடித்துச் சாறெடுத்து,50மிலி,3மணி நேர இடைவெளியில் கொடுக்க விஷக்கடி நஞ்சு வெளியேறும்
3.   நஞ்சறுப்பான் இலையையரைத்து,எலுமிச்சையளவு,கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
4.   நஞ்சறுப்பான் இலை,வேர் சூரணம்2தேகரண்டியுடன,சிறிது மிளகுதூள் கலந்து, தேனில் குழைத்துக் கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
5.   அவுரி இலையையரைத்து எலுமிச்சையளவு கொடுக்க பாம்புக்கடி விஷம்  இறங்கும்
6.   தும்பை இலைகளை கைப்பிடி அளவரைத்துக் கொடுத்து,மூக்கிலும் நசியமிட பாம்புக்கடி விஷம் நீங்கும். கடும் பத்தியம்.
7.   முட்சங்கன்வேர் 2கிராம்,4மிளகு,சேர்த்தரைத்து,பாலில் கலந்து குடித்துவர கானாக்கடி, பூச்சிக்கடி,விஷம் குணமாகும்
8.   எருக்கம்பாலைத் தடவ  குளவி,தேனி,தேள்கொட்டு விஷம் முறியும் 
9.   ஊமத்தை இலையுடன்,மஞ்சள் சேர்த்து அரைத்துப் பற்றிட தேள்,பூரான், வண்டுக் கடியால் ஏற்படும் வீக்கம் குணமாகும்
10.  இலவங்கச் சூரணம்,கால்தேகரண்டி,தேனில் குழைத்து 3வேளைகள் உண்டுவர விஷக்கடி , தேள்கொட்டு விஷம்  முறியும்
11.  கீழாநெல்லிஇலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்
12.  கைப்பிடி கீழாநெல்லியிலைகளை,100மிலி ந.எண்ணையிலிட்டுக் காய்ச்சி, எண்ணையை கடிவாயில் தடவி,பொரித்த இலைகளை காலை,வெறும் வயிற்றில் 3நாட்கள் சாப்பிட எலிக்கடி விஷம் குணமாகும்
13.  திருநீற்றுப்பச்சை இலைகளை அரைத்துப்பூச தேள்கொட்டு வீக்கம்,குடைச்சல் குணமாகும்
14.  பெருங்காயத்தை  வெந்நீரிலுரைத்துப்பூச,தேள்கொட்டு  சரியாகும்
15.  எருக்கன் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச்சாறெடுத்து,தேன்,சுணணாம்பு கலந்து விஷக்கடி  கடிவாயில் தடவ ஆரம்பநிலை  விஷம் இறங்கும்
16.  விளாம்பழ  பொடியை பூச்சிக்கடி,வண்டுக்கடியால் பாதிக்கப்பட்ட  இடத்தில் வைத்துக் கட்ட  விஷம் முறியும்
17.  நாயுருவி விதையை பொடித்து 50கிராம்,100கிராம் தேனுடன் கலந்து, கொள்ள எலிக்கடி விஷம் நீங்கும்
18.  நாயுருவி இலையையரைத்துக் கடிவாயில் தடவ தேள்கடி  விஷம் இறங்கும்
19.  தேன்,சுண்ணாம்பு,மஞ்சள்,உப்பு சேர்த்துக் கடிவாயில் தேய்க்க தேள்கொட்டு விஷம் இறங்கும்
20.  புளியங்கொட்டையை சூடேற கல்லில் தேய்த்து தேள்கடிவாயில் வைக்க ஒட்டிக் கொள்ளும். விஷம் இறங்கியவுடன் கொட்டை விழுந்துவிடும்
21.  சுரைவேர்,அருகம்வேர்,கீழாநெல்லிவேர்,சிறுகீரைவேர்,காட்டுக்கொட்டைவேர் பட்டை,சோற்றுக்கற்றாழைச்சருகு,மிளகு ஆகியவற்றை  சிதைத்துப் போட்டு. காய்ச்சி,குடிநீர் செய்து,குடித்துவர நஞ்சு முறியும்
22.  மஞ்சள்,நன்னாரிவேர் நெய்யிலரைத்துப்பூச அட்டை விஷம் நீங்கும்
23.  கறளகவேர்,நன்னாரி வேர்,அவுரிவேர் சமனெடுத்து,மஞ்சள் நீரிலரைத்துப்பூசி, உள்ளுக்கும் சாப்பிட பல்லி விஷம் நீங்கும்
24.  பச்சைமஞ்சளை தட்டிப்போட்ட நீரில் காயத்தை உரைத்து சேர்த்து கடிவாயில் போட பூரான் விஷம் நீங்கும்
25.  கிரந்திநாயகம் இலைகளை கசக்கித்தேய்க்க பூரான், வண்டுக்கடி விஷங்கள் நீங்கும்
26.  குப்பைமேனி வேர்5கிராம்,அரைத்து,நீரில் தினம் காலையில்,3நாள் பருகிவர எலிக்கடி விஷம் குணமாகும்
27.  சிவனார்வேம்பு சமூலத்தையுலர்த்தி,குடிநீர் செய்து பருகிவர பூச்சிக்கடி நஞ்சு நீங்கும்
28.  நிலவேம்பு இலைகளை அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டுவர தங்கிய விடம் நீங்கும்
29.  வெங்காயத்தை வெட்டித் தேய்க்க தேள் கொட்டிய விஷம் இறங்கும்
30.  பிரமத்தண்டு இலையையரைத்துக் கடிவாயில் கட்ட  தேள்கடி விஷம்  இறங்கும்
31.  பிரமத்தண்டு சமூலச்சாறு 30மிலி உள்ளுக்குக் கொடுத்து ,இலையையரைத்துக் கடிவாயிலும் கட்ட பாம்புக்கடி விஷம் முறியும்
32.  கார்த்திகைமாதம் 30 நாளும் வேம்பின் துளிரை சாப்பிட்டுவர பாம்பு நஞ்சு நீங்கும். எந்த விடமும் பாதிக்காது
33.  ஆடுதீண்டாபாளை இலை சூரணம்  கால்தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள பாம்பு விஷம்,சில்விஷம்,கருங்குட்டம், யானைதோல் சொறி தீரும் .
34.  ஆடுதீண்டாபாளைவேரை அரைத்துக் காலைமாலை கடும் பத்தியத்துடன் கொள்ள 3 நாளில் எல்லாவிதப் பாம்பு நஞ்சுகளும் நீங்கும்
35.  பேய்ச்சுரை,பெருந்தும்பட்டி,சிறுதும்மட்டி,பேய்ப்புடல்,பேய்பீர்க்கு சமூலங்களை உலர்த்திப் பொடித்து,சமன் கலந்து,காலைமாலை,அரைதேகரண்டி,வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் நீங்கும்
36.  10கிராம் இலுப்பை பிண்ணாக்கை நீர்விட்டரைத்து,50மிலி நீரில் கரைத்துக் கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சை வெளியாக்கும்.
37.  பொன்னாவாரை வேருடன் மிளகு கூட்டி அரைத்து விழுங்க பாம்பு விஷம் உடனே நீங்கும்
38.  ஈஸ்வரமூலி வேர்40கிராம்,சிதைத்து,8ல்1ன்றாய்க்காய்ச்சி,30மிலி,2, 3 வேளை பருகி, கடிவாயில் இலையை கசக்கித்தேய்க்க பாம்புக்கடி, தேள்கடி விஷம் நீங்கும்
39.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்
40.  சிலந்திநாயகம்சமூலச்சாறு 60மிலி கொடுத்து, இலையையரைத்துக்கட்டி, கடும்பத்தியம் வைக்க அனைத்து பாம்பு நஞ்சும் முறியும் .
41.  சிறுதேட்கொடுக்கிலையை கசக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி, கடுப்பு தீரும்
42.  சப்பாத்திக்கள்ளி வேர்பொடி 10கிராம் கொள்ள பூரான்,வண்டுக்கடி நஞ்சுகள் முறியும். தேள்கடிக்கு கொடுத்து ,காயை வதக்கி கடிவாயில் கட்ட குடைச்சல் தீரும்
43.  பீச்சங்குஇலைச்சாறு 250மிலி கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்
44.  பிரமதண்டு சமூலச்சாறு 30மிலி கொடுத்து,இலையையரைத்து கடிவாயில் கட்ட பாம்பு விஷம் இறங்கும்.
45.  மாவிலங்கம் வேர்பட்டை கொட்டை பாக்களவு அரைத்துக் கொடுத்துவர பாம்பு நஞ்சு, வண்டு நஞ்சு தீரும்
46.  வாகைபூவையரைத்து,சுண்டைக்காயளவு,வெந்நீரில் கலக்கிக் கொடுத்து, கடிவாயிலும் அரைத்துக் கட்ட பாம்பு நஞ்சு நீங்கும்                                                                          
47.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்.
48.  நாட்டு வெங்காயம் 4 பாதியாக நறுக்கி தட்டையான பாகத்தை கடிவாயில் அழுத்துத் தேய்க்க தேள் கொட்டிய முள் வெளியேறி கடுப்பு நீங்கும்.                                                 
49.  எட்டிப்பட்டையில் சிறுதுண்டு,3கல்லுப்பு சேர்த்து மென்று சாறை விழுங்க தேள்விஷம் இறங்கி கடுப்பு தீரும்.                                                     
50.  அப்பிரக பற்பம் எருக்கிலைச்சாற்றில் குழைத்துச்சாப்பிட தேள்விஷம் உடனே இறங்கும்.                                                                       
51.  நவச்சாரம்.சமன் சுண்ணாம்பு குழைத்துப் பற்றிட தேள்விஷம் இறங்கும்.கடுப்பு தீரும்.                                                                               
52.  நாயுருவி விதையைப்பொடித்து நீரில் குழைத்துப் பற்றிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                                             
53.  நாயுருவிவேரை மென்று சாற்றைச் சாப்பிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                                            
54.  அரளிவேரை மையாக அரைத்து கடிவாயில் தடவ தேள்விஷம் இறங்கி கடுப்பு நிற்கும்                                                                
55.  தும்பை,துளசி சமன் 1பிடி உள்ளுக்கும் சாப்பிட்டு கடிவாயிலும் அரைத்துக் கட்ட தேள் விஷம் நீங்கி கடுப்பு தீரும்.                                    
56.  கல்உப்பு 1தேகரண்டி,4தேகரண்டி சுத்தமான நீரில் கரைத்து,தேள் உடம்பின் வலப்பக்கம் கொட்டினால் இடது கண்ணிலும்,இடப்பக்கம் கொட்டினால் வலது கண்ணிலும்,நடுமுதுகு,மார்பு,தலையில் கொட்டினால் 2கண்ணிலும் விட்டு, கடிவாயிலும் உப்புக்கரைசலைத் தேய்க்க சுகமுண்டாகும்.                                                         
57.  ஒரு கொப்பரைத் தேங்காய் அல்லது முற்றின தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் 1தம்ளர் சுவைத்துச் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் இறங்கும்.                                             
58.  அவுரிவேர்,காஞ்சிரம்வேர் சமன் பொடித்து 5கிராம் வெந்நீரில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் நீங்கும்.                                    
59.  அப்பிரகபற்பம் வெள்ளருகுச்சாற்றில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் தீரும்.                                                          
60.  கஞ்சாங்கோரைச்சாறு 200மிலி பருக பாம்பு விஷம் தீரும். 
61.  சாரனைவேர்,ஆடுதின்னாப்பாளை,புங்கம்வேர்,சிறுகுறிஞ்சான்,துளசி,சுக்கு, முல்லை சமனெடுத்து,மேனிச் சாற்றிலரைத்து,கடிவாயிலும்,உடம்பிலும் பூச எல்லா வகையான நஞ்சும் நீங்கும். 
62.  ஆடுதின்னாப்பாளைவேர்,கவிழ்தும்பைவேர்,மரக்காரைவேர் சமனரைத்து உடம்பில்பூசி குளிக்க விஷம் இறங்கும்.                 
63.  குப்பைமேனிஇலை,உப்பு வகைக்கு150கிராம்,மஞ்சள்30கிராம் சேர்த்தரைத்து உடம்பில்பூசி 1மணிநேரம் கழித்துக் காலையில் குளிக்க (3நாள்) பூரான்கடி தடிப்பு,அரிப்பு தீரும்.                                                                
64.  150மிலி வெற்றிலைச்சாறில்,35கிராம் மிளகை ஊறவைத்துப்பொடித்து திரிகடி, காலைமாலை வெந்நீரில் சாப்பிட பூரான்கடி விஷம் நீங்கும்.                  
65.  ஆகாசகருடன் கிழங்கை சிறுசின்னி சாற்றிலரைத்து சுண்டைக்காயளவு தினம் 3 வேளை, 3நாள் சாப்பிட பூரான் விஷம் நீங்கும்.                        
66.  தும்பைஇலையை மென்று தின்று,அரைத்துப்பூச செய்யான் விஷம் இறங்கும்.                                                              
67.  அழிஞ்சில் வேர்பட்டை 30கிராம் அரைத்து வெந்நீரில் காலைமாலை 8நாள் சாப்பிட எலிக்கடியால் ஏற்பட்ட இருமல்,இளைப்பு,கோழை,வாந்தி நீங்கும்.                                                                 
68.  அவுரிவேர் 25கிராம்,150மிலி பசும்பாலில் அரைத்து 8நாள் சாப்பிட்டு, இலையை யரைத்து கடிவாயிலும் கட்ட எலிக்கடியாலேற்பட்ட பல் கருத்தல்,உடல் எரிச்சல் தீரும்.                                                         
69.  நீலக்காக்கனம்வேர் 15கிராம் பசுவின்பாலிலரைத்துச் சாப்பிட எலிக்கடியால் உண்டான பல்கருத்தல்,உடல் எரிச்சல் தீரும்.                       
70.  தகரைவிதையை காடியில் அரைத்துப்பூச எலிக்கடியால் உண்டான கொப்புளம் குணமாகும்.                                                                           
71.  எலிக்கடியால் வாயில் எச்சில் அதிகம் சுரந்தால் கடுகுரோகிணியும் கற்கண்டும் வகைக்கு 30கிராம் பொடித்துச் சாப்பிட குணமாகும்.                                
72.  பச்சை நன்னாரிவேர் அரைத்து 30கிராம்,200மிலி பசும்பாலில் கலந்து பருக எலிவிஷம் முறியும்.                                                           
73.  ஆதளை சமூலத்தை பசும்பாலிலரைத்து 30கிராம்,200மிலி பாலில் காலையில் சாப்பிட்டு பத்தியமிருக்க 18 வகையான எலிகடி விஷமும் தீரும்.                                                          
74.  அப்பிரகபற்பத்தை மலைவேம்புச்சாற்றில் குடிக்க பெருச்சாளிக்கடி விஷம் நீங்கும்.                              
75.  கோவையிலை,சுண்டையிலை,மணத்தக்காளியிலை,உப்பு சேர்த்தரைத்து நாய்க்கடிவாயில் வைத்துக்கட்ட விஷம் நீங்கும்.                                    
76.  அழிஞ்சில் பட்டை10கிராம்,துளசிச்சற்றிலரைத்து வெந்நீரில் காலை 3நாள் சாப்பிட நாய்விஷம் தீரும்.                  
77.  முருங்கைஈர்க்கு,சுக்கு,மிளகு,வசம்பு சுட்டகரி வகைக்கு 10கிராம் 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 50மிலி சாப்பிட நாய்க்கடியால் உண்டான வாந்தி நிற்கும்.                                
78.  கொல்லங்கோவைக்கிழங்கு 10கிராம்,துளசிச்சாறிலரைத்து,வெந்நீரில் பருகி, கடிவாயிலும் கட்ட பூனைக்கடி விஷம் நீங்கும்.     
79.  குப்பைமேனிவேர்ப்பட்டையை பசுவின்பாலிலரைத்து காலைமாலை 7நாள், கழற்சிக்காயளவு சாப்பிட்டு பத்தியமிருக்க பூனை விஷம் நீங்கும்.
80.  அவுரிவேர்பட்டையை வெந்நீரிலரைத்து,கடிவாயிலும்,உடல்முழுதும் தடவ பூனைவிஷம் நீங்கும்.                                                      
81.  சுக்கு,வசம்பு சுட்டுகரியாக்கி சமன் கலந்து,15கிராம்,காலைமாலை தேனில் 44 நாள் சாப்பிட அரனைவிஷம் தீரும்.  
82.  ஆடாதொடையிலை35கிராம்,பச்சைமஞ்சள்20கிராம்,மிளகு10கிராம் துளசிச் சாற்றிலரைத்து 3முறைகட்ட சிலந்திகடி தீரும்.                        
83.  அவுரிசமூலக்குடிநீர் 50மிலி,தினம்2வேளை,7நாள் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.                                                              
84.  அவுரி,உத்தாமணி,மேனி இலைகளையரைத்து,கொட்டைப்பாக்களவு,பசு மோரில் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.   
85.  சித்திரமூலம்,வெள்ளைகாக்கணாங்கொடி,அவுரி,வேலிபருத்தி,ஆடுதின்னாப் பாளை   வேர்களை சமனாய் பொடித்து திரிகடி வெந்நீரில் சாப்பிட்டுவர தவளை விஷம் நீங்கி மேனி அழகு பெறும்.                                 
86.  வெள்ளாட்டுப்பால்100மிலி,புளித்தமோர்100மிலி கலந்து12நாள் பருக வண்டுக்கடி தீரும்.                                                   
87.  ஆடுதீண்டாப்பாளைவேர் சுண்டைக்காயளவரைத்து,200மிலி பசுமோரில் 7நாள் சாப்பிட வண்டுக்கடி தீரும்.                                        
88.  சிறுசின்னி இலை அரைத்து கழற்ச்சிக்காயளவு,200மிலி பசுமோரில் பத்தியத்துடன் 48நாள் சாப்பிட தென்னைமரவண்டு,6புள்ளிவண்டுகடி விஷம் நீங்கும்.                                                   
89.  அவுரிவேர்,நன்னாரிவேர் வகைக்கு 15கிராம்,அரைத்து பசுவின்பாலில் பருக குரங்குகடி,மனிதர் கடி விஷம் நீங்கும்.                          
90.  கொல்லங்கோவைக்கிழங்கை அரைத்துக் கடிவாயில் கட்டி,உள்ளுக்கும் சாப்பிட குரங்குக்கடி,மனிதர்க்கடி விஷம் நீங்கும்.                                                       
91.  அமுக்கரா 70கிராம் பொடித்து திரிகடி,தேனில் சாப்பிட்டு,அவுரிச் சமூலத்தை அரைத்து கடிவாயில் 7நாள் கட்ட குதிரை விஷம் நீங்கும்.
92.  காட்டுவாகைவேர்,இலை,பட்டை,பூ,காய் வெந்நீரிலரைத்து பூச மரவட்டைகடி நீங்கும்.                                                       
93.  தண்ணீர்விட்டான்கிழங்குச்சாறு 50மிலி தினம்2வேளை பருகிவர மரவட்டைக்கடி விஷம் நீங்கும்.                                                          
94.  குப்பைமேனிச்சாறுடன் உப்பு,மஞ்சள் பொடி கலந்து கடிவிஷம், நமைச்சல் உள்ள இடங்களில் தடவ கம்பளிப்பூச்சிக்கடி தீரும்.   
95.  வெற்றிலைச்சாறு75மிலி,ந.எண்ணையில் கலக்கிக் குடிக்க கம்பளிப்பூச்சி விழுந்த நீரைக் குடித்ததனால் உண்டான வாந்தி தீரும். 
96.  வெற்றிலை,தும்பையிலை,அவுரியிலை,பெருங்காயம்,மிளகு,வசம்பு, வகைக்கு 10கிராம் சிறுகுழந்தை சிறுநீர்விட்டு தட்டிப் பிழிந்து காதிலும், மூக்கிலும் நசியமிட சகல விஷக்கடிகளாலும் பேச்சுமூச்சின்றிக் கிடந்தால் விஷம் நீங்கி உணர்வு உண்டாகும்.                                         
97.  ஆமணக்குஇலையும் மிளகும் சேர்த்தரைத்து மணிக்கொருதடவை கொடுக்க பாம்பு விஷம் நீங்கும்.ஏறாது.வாந்தியாகும்.                          
98.  பூரான்,அரனை கடித்தவுடன் சிறிது பனைவெல்லம் சாப்பிட விஷம் முறியும்.                                      
99.  ஆடாதோடை,பச்சைமஞ்சள்,மிளகு சேர்த்தரைத்துக் கடிவாயில் கட்ட சிலந்தி விஷம் உடனே முறியும்.                                         
100.குப்பைமேனிச்சாறும் சுண்னாம்பும் குழைத்துப்பூச எந்த விஷக்கடி வீக்கமும் வடியும்.                                                                 
101.35கிராம் பூவரசம்பூவை 1லி நீரில் 250மிலியாகக் காய்ச்சி காலை மாலை 100மிலி பருகிவர கானாக்கடியால் ஏற்பட்ட நமைச்சல்,தடிப்பு குணமாகும்.                                                    
102.மிளகும் வெல்லமும் சேர்த்து சாப்பிட்டு பின்னர் வாந்தியாகும்வரை நீர் அருந்த பல்லி,அரனை போன்ற சிறுவிஷங்கள் முறியும்.                     
103.எருக்கம்பாலை கடிவாயில் தடவ நாய் விஷம் ஏறாது முறியும்.
104.வெள்ளைக்கடுகை ஊறவைத்தரைத்து,நெல்லிக்காயளவு கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சு  வெளியேறும்                                                 
105.தும்பைஇலை,பூ சாறுபிழிந்து 20மிலி உள்ளுக்குக்கொடுத்து, கடிவாயிலும் பூச தேள்கடி,சிறுகடிவிஷங்கள் இறங்கும்.                                                  
106.நாயுருவி வேரை மென்று சாற்றை விழுங்க தேள்விஷம் இறங்கும்.  .
107.வெள்ளைஅரளிபூ,புகையிலை,ஏலதூள் சமனரைத்து நசியமிட  பாம்பு விஷம் இறங்கும்.                                                   
108.அருகம்புல்லை அரைத்துக்கட்ட பாம்பு விஷம் இறங்கும்.
109.பெரியாநங்கையிலையை சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருக்க பாம்பு விஷம் இறங்கும்.                                              
110.முருங்கையிலைச்சாறு,முற்றிய தேங்காய்ப்பால் சமன் கலந்து தினம் 50மிலி கொடுக்க இடுமருந்து முறியும் 3வேளை.                                                                                        
111. மஞ்சள்,துளசியிலை சேர்த்தரைத்து கடிவாயில் பூசி உள்ளுக்கும் சாப்பிட்டுவர                                              எட்டுக்கால் பூச்சி விஷம் தீரும்
112.அருகம்வேர்30கிராம்,சிறுகீரைவேர்15கிராம்,மிளகு5கிராம்,சீரகம்5கிராம்,1லிநீரில் கால் லி ஆக காய்ச்சி பால் கற்கண்டு சேர்த்து பருக மருந்துவீறு தணியும்.
113.ஆலம்பட்டை,அவுரிப்பட்டை,அத்திப்பட்டை வகைக்கு40கிராம்,மிளகு10கிராம், இடித்து 8லி நீரிலிட்டு 2லி ஆக காய்ச்சி 250மிலி தினம் 3வேளை குடித்துவர பாதரச பாஷாணங்கள் வேகம் குறையும்.  
114.அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேளை நாற்பத்தெட்டு நாள் எடுக்க எலி விஷம் முறியும்
115.நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேளை அருந்த தேள் விஷம் முறியும்
116.தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் தேள் முறியும்.
117.அவுரி பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த எலி விஷம் முறியும் .
118.சிறுகுரிஞ்சான் ஒருகிராம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.
119.சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்
120.சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.
121.பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.
122.ஆடு தீண்டா பாளை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண வண்டுகடி விஷம் நீங்கும்.
123.தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் செய்யான் நீங்கும்.
124.எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த செய்யான் விஷம் முறியும்.
125.குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க பூரான் விஷம் நீங்கும்.
126.சிரியாநங்கை  சாறு அல்லது அரைத்து ஐந்து கிராம் எடுக்க பூரான் .விஷம் முறியும் .
127.பனை வெல்லத்தை (கருப்பட்டி) சாப்பிட பூரான் கடி தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
128.நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சமமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து எலுமிச்சை அளவிற்குக் காலை மாலை பத்து நாள் உட் கொள்ள வெறிநாய்க்கடி குணமாகும்.
129.சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்ட நஞ்சு இறங்கி விடும்.
130.குப்பை மேனி இலையை கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவி கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.
131.நாயுருவியின் விதை வீசம் படி எடுத்து வெயிலில் காய வைத்துப் பொடி செய்து மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலை மாலை 25 நாட்கள் சாப்பிட எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் நஞ்சு நீங்கும்.
132.எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து, கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவ தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
133.வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட வண்டு,பூச்சிக்கடி விஷம் முறியும்.

 மூலியடா பங்கம்பாளை கொண்டு.  வந்து உன் மனையில் வைத்திருந்தால்          கொடிய விடம் அணுகாது  குடியோடிப்போம்                             நன்றானநாகதாளிக்கிழங்கு தானும்
நன்மனையிலிருக்க விடம் நாடாதப்பா
அன்றான ஆகாசகருடன் மூலி
அம்மனை யிலிருக்க விடமற்றுப்போம்
                                                - சித்தர் பாடல்.                
                    தெரிந்துகொள்ளுங்கள்:                                                                           பாம்புகள் கடல்பாம்புகள்,எலாபிட்டுகல் என்று 2வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.                                                எலாபிட்டுகல் வகையை சேர்ந்தவையே நல்லபாம்புகள்..எல்லாவற்றிற்கும் ஒரே வகையான விஷமே. விரியன்,வழலை,பனசை,புடையன்,ஓலைபாம்பு போன்றவை நல்லபாம்பை விட விஷம் குறைந்தவையே.விஷதன்மையை பொறுத்து 2 வகையாக பிரிக்கப்படுகின்றன.                                                                            நல்லபாம்பு வகை (colubrine) ,     விரியன் வகை(vi perene)                                    
அறிகுறிகள்;                                                                                                             நல்லபாம்புகடித்தால்;                                                                           நஞ்சு நரம்புகளின் மீது வேலை செய்யும்.                                                                                                     1.அந்த இடத்தில் எரிச்சல்,திமிருண்டாகும்.                                                                                   2.வாய்க் குமட்டல்                                                                                                                            3.நடைதடுமாறல்                                                                                                                                          4.பேசமுடியாமை                                                                                                                             5.மயக்கம்.                                                                                                                                                             6.எச்சில் பெருகி வழியும்.                                                                                                                             7.அறிவு மயங்கி வாயிலும்,மூக்கிலும் நுரை வரும்.                                                                                  8.மூச்சு குறையும்.                                                                                                                         9.மூச்சடைப்பும், மரணமும்.                                                                                                        விரியன்வகை                                                                                                            நஞ்சு நேரிடையாக இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் தாக்கும்.            1.கடிவாயில் விடாத எரிச்சல்                                                                                                    2.கடிவாயில் ஓயாத இரத்தப்பெருக்கு                                                                                                                   3. கடிவாயைச் சுற்றி சதை வீங்கி,நீலநிறம்.                                                                             4.இரத்த உறையும் தண்மை குறைதல்                                                     5.வாய்,மூக்கு,இரைப்பையில்  இரத்த ஒழுக்கு                                                                           6.சிறுநீரில் இரத்தம்.                                                                                                                                      7.இரத்த அழுத்தம் குறைதல்.                                                                                                                  8.இருதய அடைப்பு, மரணம                                                                                     பரிசோதனைகள்;                                                                                                                                  1.சிறிது மிளகை மென்று தின்ன,காரம் தோன்றவில்லையானால் விஷம் ஏறி உள்ளது                                                   2.ஆடுதீண்டாப்பாளை வேரை மெல்லவும்.                                                                                                   இனித்தால் நல்லபாம்பு.                                                                                                                  உப்புகரித்தால் விரியன்.                                                                                                                                 துவர்த்தால் வழலை.                                                                                                                                      கசந்தால் விஷம் இல்லை.   
இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு,
தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு,
உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு,
மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,
கண் பஞ்சமடைவது -மூஞ்செறி பாம்பு,
காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு,
புளிப்பு -வழலைப் பாம்பு,
புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு,
முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு,
நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு,
நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு,
கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு,                                                     பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.                                                   பச்சைப்பாம்பு  கடிக்காது,ஆனால் தன் கூறிய மூக்கினால் கண்ணைத் தாக்கும்.                       குறிப்புகள்;                                                                                                                                                                              இரை உண்ட பாம்பு கடித்தால் விஷம்  இருக்காது.                                                                சாரைப்பாம்பு  விஷம்  வெளியேற்றப்பட்டிருந்தால் ஒருவாரத்தில் 10% விஷமே இருக்கும்.                                                                                                                                                                             நச்சுப்பல்  இரத்தக்குழாயை கிழித்து விஷத்தை செலுத்தினால் மட்டுமே அபாயம். இது அபூர்வம்.                                                                                                                                               1 பல் பட்டால் கால்கடி ;புள்ளடி போலிருக்கும். பனிநீர்போல நீர் கசியும். விஷம் தோலைப் பற்றி ஏறும்.                                                                                                                  2 பல் பட்டால் அரைக்கடி;முக்கோணம் மாதிரி இருக்கும்.மஞ்சள்  நிறநீர்  கசியும். மாமிசத்தைப் பற்றி ஏறும்.                                                                                                                   3 பல் பட்டால் முக்கால்கடி;முள்தைத்த கீற்றுபோல் இருக்கும்.செந்நீர் கசியும். எலும்பை  பற்றி  ஏறும்.                                                                                                                    4 பல் பட்டால் முழுக்கடி;வில் போலிருக்கும்.கழுநீர்போல் கசியும்.மூளையை பற்றி ஏறும்.                                                                                                                                                                                                                        தேள்;                                                                                                                 கருந்தேள்;கரேலென்று பளபளப்புடன் இருக்கும்.                                            வீட்டுத்தேள்;இலேசான மஞ்சள்,சிகப்பு,கறுப்பு  நிறங்களுடன் இருக்கும்.              மரத்தேள்; மரஙகளின் நிறத்திற்கேற்ப மரங்கள், மரப் பொந்துகளில்  இருக்கும்.               வயல்தேள்;நண்டின் முன்னங் கால்களை போல் அகலமான முன்னங்கால் கொண்டிருக்கும்.                                                                                                                               ஜலமண்டலத்தேள்; 2 க்க வரிசையிலும் ஊசி போன்ற கால்கள்; தரை மட்டமான வால்; வேகமாக ஓடும். நீர் நிலைகளில் காணும்.                                       உச்சிலிங்கத்தேள்; பகலில் கொட்டும்.கடிவாயில் வீக்கம்,நரம்புகளில் வேதனை, ரோம சிலிர்ப்பு உண்டாகும்.                                                            வாதத்தேள்;மார்பு,எலும்பு,நரம்புகளில் அதிகவலி,சரீரம் கருமையாதல், கூச்சல், புரளுதல்,  மேல்மூச்சு உண்டாகுதல் தோண்றும்                                  பித்தத்தேள்;கடுமையான மூச்சு வாங்குதல்,வாய் காரமாயிருத்தல்,முகத்தில் எண்ணைப்பசை வழவழப்பு உண்டாகுதல்,அறிவுமயங்குதல்,பீதி உண்டாதல், 24மணி நேரம் அவஸ்தை உண்டாதல் தோன்றும்.                        சிலேஷ்மதேள்;வாயில் நீர் ஊறல்,வாந்தி,மார்பு அதிர்ச்சி,அரோசிகம்,உடல் முழுதும் வாழைத்தண்டை போல் குளிர்ச்சி,இனிப்புச்சுவை தோன்றும்.                    நட்டுவாக்காலி;  தேள் இனத்தைச் சேர்ந்தது.தேளைவிட பருமனாக,7 -15 அங்குலம் வரை இருக்கும்.கரிய நிறம்.பாழடைந்த வீடு,தோட்டம், சந்து பொந்துகளில் காணும். நன்றாக பிடித்தபின்பே கொட்டும். கடுமையான கடுப்பு,வலி,ஆயாசம்,மயக்கம், வாயில் நுரை தள்ளுதல் உண்டாகும். கொட்டுவாயில் புண்,வீக்கம் உண்டாகும்.                            முதலுதவிகள்;                                                                                                                 1.பாம்பு,தேள் கடித்தால் கடிவாயின்மேல் இறுக்கமாக கட்டி இரத்தஓட்டத்தை தடை செய்யவும்.2 மணி நேரம் தடைசெய்தால் விஷம் மேலே ஏறாது.                     2.வாழைச்சாறு கொடுக்க உடனே விஷம் இறங்கும்.                                                       பூரான்;   (100 கால் பூச்சி)       5-7 அங்குலம் நீளமுடையது.கடித்த 2நாட்களுக்கு பின்னே தடிப்பு,அரிப்பு தோன்றும்.அமாவாசை தினங்களில் அதிகம் தடிப்பு எரிச்சல் காணும்,                                                                                                                           செய்யான்; பூரானைப் போன்று பெரியது. 8-12 அங்குலம் உள்ளது. பெரும்படைச்செய்யான், மருட்சிச்செய்யான்,  பட்டைச்செய்யான் என பல வகை உண்டு. பூரானைவிட சற்று அதிக வீரியம் உடையது.                           எலி;    18 வகை உள்ளது.                                                                                                                       1.புங்கவன்;    கடித்தால் கைகால்களில் எரிச்சல்,கண்களில் கருமை,சோகம் உண்டாகும்.                                                                  2.உத்தமன்;காது மத்தியமாகும்.கண்ணொளி மங்கும்.துன்பம் அதிகரித்து, கருநிறமாகும், வீங்கும்.                                                                                                          3.புரந்தரி;தேகம் கருக்கும், தளர்ச்ச்சி.கடிவாயில்கடுப்பு,வலியுடன்,காரத்தை வைத்தது போல் எரிச்சல் 5நாள் இருக்கும்.                                              4.சுண்டெலி;   கடிவாயிலிருந்து ஊண் தண்ணீர் பொசியும்.கடிவாய் வட்டமாக ஆகும்.                                                                           5. அருணன்;இருமல்,ஈளை,மேல்சுவாசம் உண்டாகும்.கால்கள்,உடல் முழுதும் கடுப்பு, வலி ஏற்படும். அடிக்கடி மயக்கம் உண்டாகும்.                        6.குலமந்திரி;சரீரம் முழுதும் வியர்த்து நீர்க் கொட்டும்.நமைச்சல் உண்டாகும்.                  7. பாண்டுபுத்திரி;கொப்புளங்கள் உண்டாகும்.கடுப்பு,வலி காணும்.                8.விருங்கன்;உடலில் எரிச்சல்,காது செவிடு உண்டாக்கும்.                9.புண்டரகன்;உடலில் வீக்கம்,உணவு சீரணிக்காமல் வாந்தி,முகம் சிவத்தல், நா உலர்தல்,ஆயாசம் தோண்றும்.                                           10.அரா;உடல் வீங்கும்.எச்சில் ஒழுகும்,ஆயாசம் உண்டாகும்.   11.கடைப்பல்லன்;பற்கள் விழுந்து உதடு தடிக்கும்.மயக்கம் உண்டாகும்.  12.பன்றிமூக்கன்;கை விரல்கள் வீங்கும்,மூக்கிலிருந்து நீர் பொசிந்து கொண்டே இருக்கும்.                                                         13.செங்கோடன்;வயிற்றில் வலி,வயிறு பொருமி கழிச்சல்,கண்வலி உண்டாகும். 14.கருவால்;உடல் கடுகடுப்புடன்,உதடு,சரீரம்,நகங்கள் உட்பட கருநிறமடையும்.                                                15.சதங்கை வாயெலி;சரீரத்தில் எரிச்சல்,வீக்கம்,கடுகடுப்பு உண்டாகும். நிலத்தில் புரண்டு பற்களை அடிக்கடி கடிப்பான்.                          16.அட்டைமூஷிகம்;வெடிப்புகள் உண்டாகும்.கோழைகட்டும்.தலை முடி உதிரும்.                                                                  17.செந்தலை;தாங்க முடியாத எரிச்சல் காணும்.அரிப்பு உண்டாகி தடிக்கும். அதிலிருந்து துர்நீர் கசியும்.                                    18.அரணைவாலெலி;சரீரத்தில் எரிச்சல்,சுள்சுள்ளென்ற அரிப்பு,சதா உமிழ்நீர் சுரத்தல், ஆயாசம் காணும்.                                             19.பெருச்சாளி;கடிக்காது,உடனே மருந்து கொள்ளாவிட்டால் ஆஸ்துமா,ஈளை, இழுப்பு உண்டாகும்.மருந்துக்கு வசமாகா.                                                          நாய்;   எஜமானரின் மனநிலையால் பாதிக்கப்பட்டு வெறி பிடிக்கிறது.தை, மாசி மாதங்களில் அதிகரிக்கும்.சருமம் அறுபட்டு,அடியில் ஜவ்வுகளோடு வைரஸ் கலந்து நோய் முதிரும்.                                                                        பூனை; தொந்தரவு செய்தால் கடிக்கும்.புண்ணாகி கடுக்கும்.நாளானால் மயக்கம்,ஜுரம், இருமல்,ஈளை,காசம் உண்டாகும்,பூனைபோல் கத்தி சீறுவார்கள்.                                                     அரனை;கடிவாயில் வெள்ளை நிற நுரை வரும்.உடல் முழுதும் நடுக்கம் உண்டாகும். நாக்கு தடித்து பேச்சு வராமல் வாய் குளறும்.                                    சிலந்தி;விஷம் இரத்தத்தில் கலந்து ஊறி உருண்டையான கட்டிகளாக வெளி வரும். வேதனை உண்டாகும்.                                                         ஓணான்; பிறையைப்போல் காயமுண்டாகும்.வீக்கம்,குத்தல்,ஆயாசம் காணும் .ஓணான் எந்த நிறமாயிருக்கிறதோ அதே நிறத்தில் பேதியாகும்.                   தவளை;   நீர் மேலேபட்டால் தாங்கமுடியாத சொறி உண்டாகும். சொறியும்போது புண்ணாகி நீர் கசியும்.கடித்தால் சோம்பலான நித்திரையும், கறுத்து பரவுகின்ற சொறி உண்டாகும்.அழகு கெடும்.                            பல்லி;வியர்வை,வீக்கம்,எரிச்சல்,பொடிச்சிரங்குகள் உண்டாகும்.அதிக ஆயாசம் காணும்.                                                                               வண்டு; (கானாக்கடி) இரத்தத்தில் விஷம்  கலந்த பிறகு வட்ட வட்டமாக தடிப்புகள் தோண்றும்.அரிப்பு எடுக்கும்.                                                           தென்னை மரவண்டு;கருநிறமாய் இருக்கும்.                                           ஆறுபுள்ளி வண்டு;மஞ்சள் நிறமாய் இருக்கும். உடம்பு கரு நிறமாகி,மஞ்சளாகி வீங்கி தடிக்கும்.                                                                         குரங்கு;  கடிவாயில் இரத்தம் வரும்.  கடுகடுப்பு,எரிச்சல்;வீக்கம் அதிக ஆயாசம் உண்டாகும்.                                               குதிரை;வீக்கம்,வலி,கடுகடுப்பு,வேதனை,தலைவலி,ஜுரம்,குளிர் உண்டாகும்.                                                      மரவட்டை;உடல் தடித்தல்,வியர்வை,வீக்கம்,வேதனை,பொடிப்பொடியான சிரங்குகள் தோன்றும்.                                    கம்பளிப்பூச்சி;நமைச்சல்,சொறி,வீக்கம்,கொப்புளம்,ஆயாசம் உண்டாகும். சிலருக்கு ஜுரம்,வாந்தி  உண்டாகலாம்.                                                          மனிதன்;                                                                          தற்காப்புக்கடி;கடிவாயில் கடுகடுப்பு,எரிச்சல்,தலைவலி,சரீர ஆயாசம் உண்டாகும்.                                                        வெறிக்கடி;வாயில் நுரை தள்ளும்,வியர்வை பெருக்கெடுத்து ஓடும்.                                                                                
1.   சிறுகுறிஞ்சான் வேர்சூரணம் 1தேகரண்டி சாப்பிட வாந்தியுண்டாகி,நஞ்சு வெளியேறும்
2.   வெள்ளருகு சமூலத்தை இடித்துச் சாறெடுத்து,50மிலி,3மணி நேர இடைவெளியில் கொடுக்க விஷக்கடி நஞ்சு வெளியேறும்
3.   நஞ்சறுப்பான் இலையையரைத்து,எலுமிச்சையளவு,கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
4.   நஞ்சறுப்பான் இலை,வேர் சூரணம்2தேகரண்டியுடன,சிறிது மிளகுதூள் கலந்து, தேனில் குழைத்துக் கொடுக்க நஞ்சை வெளியாக்கும்
5.   அவுரி இலையையரைத்து எலுமிச்சையளவு கொடுக்க பாம்புக்கடி விஷம்  இறங்கும்
6.   தும்பை இலைகளை கைப்பிடி அளவரைத்துக் கொடுத்து,மூக்கிலும் நசியமிட பாம்புக்கடி விஷம் நீங்கும். கடும் பத்தியம்.
7.   முட்சங்கன்வேர் 2கிராம்,4மிளகு,சேர்த்தரைத்து,பாலில் கலந்து குடித்துவர கானாக்கடி, பூச்சிக்கடி,விஷம் குணமாகும்
8.   எருக்கம்பாலைத் தடவ  குளவி,தேனி,தேள்கொட்டு விஷம் முறியும் 
9.   ஊமத்தை இலையுடன்,மஞ்சள் சேர்த்து அரைத்துப் பற்றிட தேள்,பூரான், வண்டுக் கடியால் ஏற்படும் வீக்கம் குணமாகும்
10.  இலவங்கச் சூரணம்,கால்தேகரண்டி,தேனில் குழைத்து 3வேளைகள் உண்டுவர விஷக்கடி , தேள்கொட்டு விஷம்  முறியும்
11.  கீழாநெல்லிஇலையை எலுமிச்சை அளவு மென்று சாப்பிட தேள் கொட்டு விஷம் முறியும்
12.  கைப்பிடி கீழாநெல்லியிலைகளை,100மிலி ந.எண்ணையிலிட்டுக் காய்ச்சி, எண்ணையை கடிவாயில் தடவி,பொரித்த இலைகளை காலை,வெறும் வயிற்றில் 3நாட்கள் சாப்பிட எலிக்கடி விஷம் குணமாகும்
13.  திருநீற்றுப்பச்சை இலைகளை அரைத்துப்பூச தேள்கொட்டு வீக்கம்,குடைச்சல் குணமாகும்
14.  பெருங்காயத்தை  வெந்நீரிலுரைத்துப்பூச,தேள்கொட்டு  சரியாகும்
15.  எருக்கன் பழுப்பிலைகளை அனலில் வாட்டிச்சாறெடுத்து,தேன்,சுணணாம்பு கலந்து விஷக்கடி  கடிவாயில் தடவ ஆரம்பநிலை  விஷம் இறங்கும்
16.  விளாம்பழ  பொடியை பூச்சிக்கடி,வண்டுக்கடியால் பாதிக்கப்பட்ட  இடத்தில் வைத்துக் கட்ட  விஷம் முறியும்
17.  நாயுருவி விதையை பொடித்து 50கிராம்,100கிராம் தேனுடன் கலந்து, கொள்ள எலிக்கடி விஷம் நீங்கும்
18.  நாயுருவி இலையையரைத்துக் கடிவாயில் தடவ தேள்கடி  விஷம் இறங்கும்
19.  தேன்,சுண்ணாம்பு,மஞ்சள்,உப்பு சேர்த்துக் கடிவாயில் தேய்க்க தேள்கொட்டு விஷம் இறங்கும்
20.  புளியங்கொட்டையை சூடேற கல்லில் தேய்த்து தேள்கடிவாயில் வைக்க ஒட்டிக் கொள்ளும். விஷம் இறங்கியவுடன் கொட்டை விழுந்துவிடும்
21.  சுரைவேர்,அருகம்வேர்,கீழாநெல்லிவேர்,சிறுகீரைவேர்,காட்டுக்கொட்டைவேர் பட்டை,சோற்றுக்கற்றாழைச்சருகு,மிளகு ஆகியவற்றை  சிதைத்துப் போட்டு. காய்ச்சி,குடிநீர் செய்து,குடித்துவர நஞ்சு முறியும்
22.  மஞ்சள்,நன்னாரிவேர் நெய்யிலரைத்துப்பூச அட்டை விஷம் நீங்கும்
23.  கறளகவேர்,நன்னாரி வேர்,அவுரிவேர் சமனெடுத்து,மஞ்சள் நீரிலரைத்துப்பூசி, உள்ளுக்கும் சாப்பிட பல்லி விஷம் நீங்கும்
24.  பச்சைமஞ்சளை தட்டிப்போட்ட நீரில் காயத்தை உரைத்து சேர்த்து கடிவாயில் போட பூரான் விஷம் நீங்கும்
25.  கிரந்திநாயகம் இலைகளை கசக்கித்தேய்க்க பூரான், வண்டுக்கடி விஷங்கள் நீங்கும்
26.  குப்பைமேனி வேர்5கிராம்,அரைத்து,நீரில் தினம் காலையில்,3நாள் பருகிவர எலிக்கடி விஷம் குணமாகும்
27.  சிவனார்வேம்பு சமூலத்தையுலர்த்தி,குடிநீர் செய்து பருகிவர பூச்சிக்கடி நஞ்சு நீங்கும்
28.  நிலவேம்பு இலைகளை அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டுவர தங்கிய விடம் நீங்கும்
29.  வெங்காயத்தை வெட்டித் தேய்க்க தேள் கொட்டிய விஷம் இறங்கும்
30.  பிரமத்தண்டு இலையையரைத்துக் கடிவாயில் கட்ட  தேள்கடி விஷம்  இறங்கும்
31.  பிரமத்தண்டு சமூலச்சாறு 30மிலி உள்ளுக்குக் கொடுத்து ,இலையையரைத்துக் கடிவாயிலும் கட்ட பாம்புக்கடி விஷம் முறியும்
32.  கார்த்திகைமாதம் 30 நாளும் வேம்பின் துளிரை சாப்பிட்டுவர பாம்பு நஞ்சு நீங்கும். எந்த விடமும் பாதிக்காது
33.  ஆடுதீண்டாபாளை இலை சூரணம்  கால்தேகரண்டி இரவு வெந்நீரில் கொள்ள பாம்பு விஷம்,சில்விஷம்,கருங்குட்டம், யானைதோல் சொறி தீரும் .
34.  ஆடுதீண்டாபாளைவேரை அரைத்துக் காலைமாலை கடும் பத்தியத்துடன் கொள்ள 3 நாளில் எல்லாவிதப் பாம்பு நஞ்சுகளும் நீங்கும்
35.  பேய்ச்சுரை,பெருந்தும்பட்டி,சிறுதும்மட்டி,பேய்ப்புடல்,பேய்பீர்க்கு சமூலங்களை உலர்த்திப் பொடித்து,சமன் கலந்து,காலைமாலை,அரைதேகரண்டி,வெந்நீரில் கொள்ள அனைத்து நஞ்சுகளும் நீங்கும்
36.  10கிராம் இலுப்பை பிண்ணாக்கை நீர்விட்டரைத்து,50மிலி நீரில் கரைத்துக் கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சை வெளியாக்கும்.
37.  பொன்னாவாரை வேருடன் மிளகு கூட்டி அரைத்து விழுங்க பாம்பு விஷம் உடனே நீங்கும்
38.  ஈஸ்வரமூலி வேர்40கிராம்,சிதைத்து,8ல்1ன்றாய்க்காய்ச்சி,30மிலி,2, 3 வேளை பருகி, கடிவாயில் இலையை கசக்கித்தேய்க்க பாம்புக்கடி, தேள்கடி விஷம் நீங்கும்
39.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்
40.  சிலந்திநாயகம்சமூலச்சாறு 60மிலி கொடுத்து, இலையையரைத்துக்கட்டி, கடும்பத்தியம் வைக்க அனைத்து பாம்பு நஞ்சும் முறியும் .
41.  சிறுதேட்கொடுக்கிலையை கசக்கி தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க நஞ்சு இறங்கி, கடுப்பு தீரும்
42.  சப்பாத்திக்கள்ளி வேர்பொடி 10கிராம் கொள்ள பூரான்,வண்டுக்கடி நஞ்சுகள் முறியும். தேள்கடிக்கு கொடுத்து ,காயை வதக்கி கடிவாயில் கட்ட குடைச்சல் தீரும்
43.  பீச்சங்குஇலைச்சாறு 250மிலி கொடுக்க பாம்பு நஞ்சு முறியும்
44.  பிரமதண்டு சமூலச்சாறு 30மிலி கொடுத்து,இலையையரைத்து கடிவாயில் கட்ட பாம்பு விஷம் இறங்கும்.
45.  மாவிலங்கம் வேர்பட்டை கொட்டை பாக்களவு அரைத்துக் கொடுத்துவர பாம்பு நஞ்சு, வண்டு நஞ்சு தீரும்
46.  வாகைபூவையரைத்து,சுண்டைக்காயளவு,வெந்நீரில் கலக்கிக் கொடுத்து, கடிவாயிலும் அரைத்துக் கட்ட பாம்பு நஞ்சு நீங்கும்                                                                          
47.  கிரந்திநாயகம் இலைகளை மென்று தின்று,கடிவாயிலும் கட்ட தேள்,பாம்பு நஞ்சு நீங்கும்.
48.  நாட்டு வெங்காயம் 4 பாதியாக நறுக்கி தட்டையான பாகத்தை கடிவாயில் அழுத்துத் தேய்க்க தேள் கொட்டிய முள் வெளியேறி கடுப்பு நீங்கும்.                                                 
49.  எட்டிப்பட்டையில் சிறுதுண்டு,3கல்லுப்பு சேர்த்து மென்று சாறை விழுங்க தேள்விஷம் இறங்கி கடுப்பு தீரும்.                                                    
50.  அப்பிரக பற்பம் எருக்கிலைச்சாற்றில் குழைத்துச்சாப்பிட தேள்விஷம் உடனே இறங்கும்.                                                                       
51.  நவச்சாரம்.சமன் சுண்ணாம்பு குழைத்துப் பற்றிட தேள்விஷம் இறங்கும்.கடுப்பு தீரும்.                                                                               
52.  நாயுருவி விதையைப்பொடித்து நீரில் குழைத்துப் பற்றிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                                             
53.  நாயுருவிவேரை மென்று சாற்றைச் சாப்பிட தேள் விஷமிறங்கி கடுப்பு தீரும்.                                                            
54.  அரளிவேரை மையாக அரைத்து கடிவாயில் தடவ தேள்விஷம் இறங்கி கடுப்பு நிற்கும்                                                                
55.  தும்பை,துளசி சமன் 1பிடி உள்ளுக்கும் சாப்பிட்டு கடிவாயிலும் அரைத்துக் கட்ட தேள் விஷம் நீங்கி கடுப்பு தீரும்.                                   
56.  கல்உப்பு 1தேகரண்டி,4தேகரண்டி சுத்தமான நீரில் கரைத்து,தேள் உடம்பின் வலப்பக்கம் கொட்டினால் இடது கண்ணிலும்,இடப்பக்கம் கொட்டினால் வலது கண்ணிலும்,நடுமுதுகு,மார்பு,தலையில் கொட்டினால் 2கண்ணிலும் விட்டு, கடிவாயிலும் உப்புக்கரைசலைத் தேய்க்க சுகமுண்டாகும்.                                                         
57.  ஒரு கொப்பரைத் தேங்காய் அல்லது முற்றின தேங்காய் அல்லது தேங்காய்ப் பால் 1தம்ளர் சுவைத்துச் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் இறங்கும்.                                            
58.  அவுரிவேர்,காஞ்சிரம்வேர் சமன் பொடித்து 5கிராம் வெந்நீரில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் நீங்கும்.                                    
59.  அப்பிரகபற்பம் வெள்ளருகுச்சாற்றில் சாப்பிட நட்டுவாக்காலி விஷம் தீரும்.                                                          
60.  கஞ்சாங்கோரைச்சாறு 200மிலி பருக பாம்பு விஷம் தீரும். 
61.  சாரனைவேர்,ஆடுதின்னாப்பாளை,புங்கம்வேர்,சிறுகுறிஞ்சான்,துளசி,சுக்கு, முல்லை சமனெடுத்து,மேனிச் சாற்றிலரைத்து,கடிவாயிலும்,உடம்பிலும் பூச எல்லா வகையான நஞ்சும் நீங்கும். 
62.  ஆடுதின்னாப்பாளைவேர்,கவிழ்தும்பைவேர்,மரக்காரைவேர் சமனரைத்து உடம்பில்பூசி குளிக்க விஷம் இறங்கும்.                 
63.  குப்பைமேனிஇலை,உப்பு வகைக்கு150கிராம்,மஞ்சள்30கிராம் சேர்த்தரைத்து உடம்பில்பூசி 1மணிநேரம் கழித்துக் காலையில் குளிக்க (3நாள்) பூரான்கடி தடிப்பு,அரிப்பு தீரும்.                                                                
64.  150மிலி வெற்றிலைச்சாறில்,35கிராம் மிளகை ஊறவைத்துப்பொடித்து திரிகடி, காலைமாலை வெந்நீரில் சாப்பிட பூரான்கடி விஷம் நீங்கும்.                  
65.  ஆகாசகருடன் கிழங்கை சிறுசின்னி சாற்றிலரைத்து சுண்டைக்காயளவு தினம் 3 வேளை, 3நாள் சாப்பிட பூரான் விஷம் நீங்கும்.                        
66.  தும்பைஇலையை மென்று தின்று,அரைத்துப்பூச செய்யான் விஷம் இறங்கும்.                                                              
67.  அழிஞ்சில் வேர்பட்டை 30கிராம் அரைத்து வெந்நீரில் காலைமாலை 8நாள் சாப்பிட எலிக்கடியால் ஏற்பட்ட இருமல்,இளைப்பு,கோழை,வாந்தி நீங்கும்.                                                                 
68.  அவுரிவேர் 25கிராம்,150மிலி பசும்பாலில் அரைத்து 8நாள் சாப்பிட்டு, இலையை யரைத்து கடிவாயிலும் கட்ட எலிக்கடியாலேற்பட்ட பல் கருத்தல்,உடல் எரிச்சல் தீரும்.                                                         
69.  நீலக்காக்கனம்வேர் 15கிராம் பசுவின்பாலிலரைத்துச் சாப்பிட எலிக்கடியால் உண்டான பல்கருத்தல்,உடல் எரிச்சல் தீரும்.                       
70.  தகரைவிதையை காடியில் அரைத்துப்பூச எலிக்கடியால் உண்டான கொப்புளம் குணமாகும்.                                                                           
71.  எலிக்கடியால் வாயில் எச்சில் அதிகம் சுரந்தால் கடுகுரோகிணியும் கற்கண்டும் வகைக்கு 30கிராம் பொடித்துச் சாப்பிட குணமாகும்.                                
72.  பச்சை நன்னாரிவேர் அரைத்து 30கிராம்,200மிலி பசும்பாலில் கலந்து பருக எலிவிஷம் முறியும்.                                                          
73.  ஆதளை சமூலத்தை பசும்பாலிலரைத்து 30கிராம்,200மிலி பாலில் காலையில் சாப்பிட்டு பத்தியமிருக்க 18 வகையான எலிகடி விஷமும் தீரும்.                                                          
74.  அப்பிரகபற்பத்தை மலைவேம்புச்சாற்றில் குடிக்க பெருச்சாளிக்கடி விஷம் நீங்கும்.                             
75.  கோவையிலை,சுண்டையிலை,மணத்தக்காளியிலை,உப்பு சேர்த்தரைத்து நாய்க்கடிவாயில் வைத்துக்கட்ட விஷம் நீங்கும்.                                    
76.  அழிஞ்சில் பட்டை10கிராம்,துளசிச்சற்றிலரைத்து வெந்நீரில் காலை 3நாள் சாப்பிட நாய்விஷம் தீரும்.                  
77.  முருங்கைஈர்க்கு,சுக்கு,மிளகு,வசம்பு சுட்டகரி வகைக்கு 10கிராம் 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 50மிலி சாப்பிட நாய்க்கடியால் உண்டான வாந்தி நிற்கும்.                               
78.  கொல்லங்கோவைக்கிழங்கு 10கிராம்,துளசிச்சாறிலரைத்து,வெந்நீரில் பருகி, கடிவாயிலும் கட்ட பூனைக்கடி விஷம் நீங்கும்.     
79.  குப்பைமேனிவேர்ப்பட்டையை பசுவின்பாலிலரைத்து காலைமாலை 7நாள், கழற்சிக்காயளவு சாப்பிட்டு பத்தியமிருக்க பூனை விஷம் நீங்கும்.
80.  அவுரிவேர்பட்டையை வெந்நீரிலரைத்து,கடிவாயிலும்,உடல்முழுதும் தடவ பூனைவிஷம் நீங்கும்.                                                      
81.  சுக்கு,வசம்பு சுட்டுகரியாக்கி சமன் கலந்து,15கிராம்,காலைமாலை தேனில் 44 நாள் சாப்பிட அரனைவிஷம் தீரும்.  
82.  ஆடாதொடையிலை35கிராம்,பச்சைமஞ்சள்20கிராம்,மிளகு10கிராம் துளசிச் சாற்றிலரைத்து 3முறைகட்ட சிலந்திகடி தீரும்.                        
83.  அவுரிசமூலக்குடிநீர் 50மிலி,தினம்2வேளை,7நாள் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.                                                              
84.  அவுரி,உத்தாமணி,மேனி இலைகளையரைத்து,கொட்டைப்பாக்களவு,பசு மோரில் சாப்பிட சிலந்திவிஷம் நீங்கும்.   
85.  சித்திரமூலம்,வெள்ளைகாக்கணாங்கொடி,அவுரி,வேலிபருத்தி,ஆடுதின்னாப் பாளை   வேர்களை சமனாய் பொடித்து திரிகடி வெந்நீரில் சாப்பிட்டுவர தவளை விஷம் நீங்கி மேனி அழகு பெறும்.                                 
86.  வெள்ளாட்டுப்பால்100மிலி,புளித்தமோர்100மிலி கலந்து12நாள் பருக வண்டுக்கடி தீரும்.                                                   
87.  ஆடுதீண்டாப்பாளைவேர் சுண்டைக்காயளவரைத்து,200மிலி பசுமோரில் 7நாள் சாப்பிட வண்டுக்கடி தீரும்.                                       
88.  சிறுசின்னி இலை அரைத்து கழற்ச்சிக்காயளவு,200மிலி பசுமோரில் பத்தியத்துடன் 48நாள் சாப்பிட தென்னைமரவண்டு,6புள்ளிவண்டுகடி விஷம் நீங்கும்.                                                  
89.  அவுரிவேர்,நன்னாரிவேர் வகைக்கு 15கிராம்,அரைத்து பசுவின்பாலில் பருக குரங்குகடி,மனிதர் கடி விஷம் நீங்கும்.                          
90.  கொல்லங்கோவைக்கிழங்கை அரைத்துக் கடிவாயில் கட்டி,உள்ளுக்கும் சாப்பிட குரங்குக்கடி,மனிதர்க்கடி விஷம் நீங்கும்.                                                       
91.  அமுக்கரா 70கிராம் பொடித்து திரிகடி,தேனில் சாப்பிட்டு,அவுரிச் சமூலத்தை அரைத்து கடிவாயில் 7நாள் கட்ட குதிரை விஷம் நீங்கும்.
92.  காட்டுவாகைவேர்,இலை,பட்டை,பூ,காய் வெந்நீரிலரைத்து பூச மரவட்டைகடி நீங்கும்.                                                       
93.  தண்ணீர்விட்டான்கிழங்குச்சாறு 50மிலி தினம்2வேளை பருகிவர மரவட்டைக்கடி விஷம் நீங்கும்.                                                          
94.  குப்பைமேனிச்சாறுடன் உப்பு,மஞ்சள் பொடி கலந்து கடிவிஷம், நமைச்சல் உள்ள இடங்களில் தடவ கம்பளிப்பூச்சிக்கடி தீரும்.   
95.  வெற்றிலைச்சாறு75மிலி,ந.எண்ணையில் கலக்கிக் குடிக்க கம்பளிப்பூச்சி விழுந்த நீரைக் குடித்ததனால் உண்டான வாந்தி தீரும். 
96.  வெற்றிலை,தும்பையிலை,அவுரியிலை,பெருங்காயம்,மிளகு,வசம்பு, வகைக்கு 10கிராம் சிறுகுழந்தை சிறுநீர்விட்டு தட்டிப் பிழிந்து காதிலும், மூக்கிலும் நசியமிட சகல விஷக்கடிகளாலும் பேச்சுமூச்சின்றிக் கிடந்தால் விஷம் நீங்கி உணர்வு உண்டாகும்.                                         
97.  ஆமணக்குஇலையும் மிளகும் சேர்த்தரைத்து மணிக்கொருதடவை கொடுக்க பாம்பு விஷம் நீங்கும்.ஏறாது.வாந்தியாகும்.                          
98.  பூரான்,அரனை கடித்தவுடன் சிறிது பனைவெல்லம் சாப்பிட விஷம் முறியும்.                                      
99.  ஆடாதோடை,பச்சைமஞ்சள்,மிளகு சேர்த்தரைத்துக் கடிவாயில் கட்ட சிலந்தி விஷம் உடனே முறியும்.                                         
100.குப்பைமேனிச்சாறும் சுண்னாம்பும் குழைத்துப்பூச எந்த விஷக்கடி வீக்கமும் வடியும்.                                                                
101.35கிராம் பூவரசம்பூவை 1லி நீரில் 250மிலியாகக் காய்ச்சி காலை மாலை 100மிலி பருகிவர கானாக்கடியால் ஏற்பட்ட நமைச்சல்,தடிப்பு குணமாகும்.                                                    
102.மிளகும் வெல்லமும் சேர்த்து சாப்பிட்டு பின்னர் வாந்தியாகும்வரை நீர் அருந்த பல்லி,அரனை போன்ற சிறுவிஷங்கள் முறியும்.                    
103.எருக்கம்பாலை கடிவாயில் தடவ நாய் விஷம் ஏறாது முறியும்.
104.வெள்ளைக்கடுகை ஊறவைத்தரைத்து,நெல்லிக்காயளவு கொடுக்க வாந்தியுண்டாக்கி உண்ட நஞ்சு  வெளியேறும்                                                 
105.தும்பைஇலை,பூ சாறுபிழிந்து 20மிலி உள்ளுக்குக்கொடுத்து, கடிவாயிலும் பூச தேள்கடி,சிறுகடிவிஷங்கள் இறங்கும்.                                                  
106.நாயுருவி வேரை மென்று சாற்றை விழுங்க தேள்விஷம் இறங்கும்.  .
107.வெள்ளைஅரளிபூ,புகையிலை,ஏலதூள் சமனரைத்து நசியமிட  பாம்பு விஷம் இறங்கும்.                                                  
108.அருகம்புல்லை அரைத்துக்கட்ட பாம்பு விஷம் இறங்கும்.
109.பெரியாநங்கையிலையை சாப்பிட்டு உப்பில்லா பத்தியமிருக்க பாம்பு விஷம் இறங்கும்.                                              
110.முருங்கையிலைச்சாறு,முற்றிய தேங்காய்ப்பால் சமன் கலந்து தினம் 50மிலி கொடுக்க இடுமருந்து முறியும் 3வேளை.                                                                                        
111. மஞ்சள்,துளசியிலை சேர்த்தரைத்து கடிவாயில் பூசி உள்ளுக்கும் சாப்பிட்டுவர                                              எட்டுக்கால் பூச்சி விஷம் தீரும்
112.அருகம்வேர்30கிராம்,சிறுகீரைவேர்15கிராம்,மிளகு5கிராம்,சீரகம்5கிராம்,1லிநீரில் கால் லி ஆக காய்ச்சி பால் கற்கண்டு சேர்த்து பருக மருந்துவீறு தணியும்.
113.ஆலம்பட்டை,அவுரிப்பட்டை,அத்திப்பட்டை வகைக்கு40கிராம்,மிளகு10கிராம், இடித்து 8லி நீரிலிட்டு 2லி ஆக காய்ச்சி 250மிலி தினம் 3வேளை குடித்துவர பாதரச பாஷாணங்கள் வேகம் குறையும்.  
114.அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேளை நாற்பத்தெட்டு நாள் எடுக்க எலி விஷம் முறியும்
115.நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேளை அருந்த தேள் விஷம் முறியும்
116.தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விஷம் தேள் முறியும்.
117.அவுரி பத்துகிராம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த எலி விஷம் முறியும் .
118.சிறுகுரிஞ்சான் ஒருகிராம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.
119.சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்
120.சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.
121.பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை மூன்று நாள் எடுக்க மனிதன் கடி விஷம் நீங்கும்.
122.ஆடு தீண்டா பாளை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண வண்டுகடி விஷம் நீங்கும்.
123.தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விஷம் செய்யான் நீங்கும்.
124.எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த செய்யான் விஷம் முறியும்.
125.குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க பூரான் விஷம் நீங்கும்.
126.சிரியாநங்கை  சாறு அல்லது அரைத்து ஐந்து கிராம் எடுக்க பூரான் .விஷம் முறியும் .
127.பனை வெல்லத்தை (கருப்பட்டி) சாப்பிட பூரான் கடி தடிப்பு, அரிப்பு உடனே மாறும்.
128.நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சமமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து எலுமிச்சை அளவிற்குக் காலை மாலை பத்து நாள் உட் கொள்ள வெறிநாய்க்கடி குணமாகும்.
129.சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்ட நஞ்சு இறங்கி விடும்.
130.குப்பை மேனி இலையை கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவி கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.
131.நாயுருவியின் விதை வீசம் படி எடுத்து வெயிலில் காய வைத்துப் பொடி செய்து மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலை மாலை 25 நாட்கள் சாப்பிட எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் நஞ்சு நீங்கும்.
132.எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து, கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவ தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
133.வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட வண்டு,பூச்சிக்கடி விஷம் முறியும்.

1 கருத்து:

Ramaraj P Ram சொன்னது…

சிறு பாம்பு காடித்தால்