பக்கங்கள்

11 அக்டோபர், 2018

ஆனைநெருஞ்சில் Pedalium murex L;Pedaliaceae


                       ஆனைநெருஞ்சில்                                       Pedalium murex L;Pedaliaceae                                  

மாற்றுப்பெயர் ;  காமரசி ,கோகண்டம்,திருதண்டம்                                          வளரியல்பு ;   சிறுசெடி                                                                     இலைஅமைப்பு ;  சதைப்பற்றுள்ள வெகுட்டல் மணமுள்ள இலை
பூ,காய் ;  தனித்த மஞ்சள்நிறப் பூக்களையும் முள்ளுள்ள நீண்ட உருளை வடிவக்                காய்களையும் உடையது.                                          மருத்துவ பாகம் ; இலை, தண்டு, விதை
குணம் ;    சிறுநீர்ப் பெருக்குதல், வெப்புதணித்தல், குளிர்ச்சிதரல், உடலுரமாக்கல்,                காமம் பெருக்கல் மாத விலக்குச் சிக்கலறுத்தல்                       செய்கை ; அந்தர்ஸ்நிக்தகாரி,மூத்திரவர்தினி,காமவிர்தினி,பலகாரி,தாதுக்ஷீணரோதி, ரக்தஸ்தம்பனகாரி                                                                  தீர்க்கும் நோய்கள்       
    மேகத்தைப் போக்கிவிடும் வெண்குஷ்டந்தானொழிக்குந்
    தேகத்திற் கல்லடைப்பைத்தீர்க்குங்கா – ணாகத்தாந்
    தேனையாரும் பாகைத்திருத்துங் கிளிமொழியே
    யானை நெருஞ்சி லது
யானை நெருஞ்சி லதுசீ தளமாகும்
மானே யெலும்புருக்கி மாற்றுங்காண் – மேனிதனி
லுள்ள வெரிச்ச லுழலையுட் டாகமொடு
தள்ளுபித்த மும்போக்குந் தான் 
  () குளிர்ச்சியுடைய யானைநெருஞ்சில் வெள்ளை,வீழல்,வெண்குஷ்டரோகம், அஸ்மரி, அஸ்திசிராவரோகம்,தேகஎரிவு,உழலை,தாகம்,பித்தமயக்கம் ஆகியவற்றைப் போக்கும் என்க 
                   
      நல்ல நெருஞ்சிலது நாளுங் கிரிச்சரத்தை
      வல்ல சுரமனலை மாற்றுங்காண் – மெல்லியலே
      மாநிலத்திற் கல்லடைப்பும் வாங்காத நீர்க்கட்டுங்
      கூனுறுமெய் வாதமும் போக்கும்.
மேகவெட்டை நீர்ச்சுருக்கு வீறுதிரிதோஷம்புண்
வேகசுர தாகவெப்பை விட்டோட்டும் – பாகந்
தருஞ்ன் மதலைமொழித் தையலேநல்ல
நெருஞ்சிலதனை நினை
 ()நல்ல நெருஞ்சில் சொட்டு மூத்திரம்,சுரவெப்பம், அஸ்மரிரோகம்,நீரடைப்பு,முடவாதம்,பிரமேக வெள்ளை,மூத்திரகிரிச்சரம்,திரிதோஷ கோபம்,விறணம்,சுரதாகம்,உஷ்ணம் நீக்கும்.                                            வகைகள் -: சிறு நெருஞ்சில், பெருநெருஞ்சில்.சிறு நெருஞ்சிலை செப்பு நெருஞ்சில், செம்மநெருஞ்சில் என்றும் கூறுவார்கள். யானை நெருஞ்சிலையே ஆனைத்திப்பிலி என்றும் சிலர் கூறுவர்.                                                          உடலின் மொத்த எடையையும் தாங்கும் பாதம் மென்மையானது.அதுபோல் யானையின் மென்மையான பாதங்களில் இது பதிந்து புண்ணாக்கி விடுமாதலால் யானை இதனை கண்டு அஞ்சும். எனவே யானை வணங்கி என பெயர் பெற்றது.
 தமிழகம் முழுவதும் மணற்பாங்கான இடங்களில் தானே வளர்கிறது.
1.   ஒரு முழுச்செடியை 1 லிட்டர் நீரிலிட்டுக் கலக்க நீர் வழுவழுப்பாக மாறும், இதனைச் சிறிது சர்க்கரைச்சேர்த்து நாள்தோறும் காலையில் பருகி வர நீர்க்கடுப்பு, வெள்ளை, சொட்டு மூத்திரம், மலட்டுத்தன்மை,சொப்பன ஸ்கலிதம் ஆகியவை தீரும்.
2.   மேற்படி சலம் 150மிலி காலை 10 நாட்கள் ப்ருகிவர புதிய வெள்ளை தீரும். நீர்க்கோவைக்குக் கொடுக்க நீர் இறங்கி வீக்கம் வாடும்.
3.   10 கிராம் இலைப்பொடி சர்க்கரையுடன் பாலில் கலந்து பருகி வர வெள்ளை, வெட்டை, மூட்டு அழற்சி ஆகியவை தீரும்.
4.   50 கிராம் இலையை மென்மையாய் அரைத்து எருமைத் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் மட்டும் சாப்பிட்டு வரச் சிறுநீர்த்தடை நீரெரிச்சல், வெள்ளை, உடம்பெரிவு ஆகியவை குணமாகும்.
5.   இலையை அரைத்துப் பற்றிட காயங்கள் ஆறும்.
6.   விதையை பொடித்து இளநீரில் கொடுக்க நீர்ச்சுருக்கு தீரும்.பசும் பாலில் கொடுக்க விந்தணுக்கள் பெருகி மலடு நீங்கும்.
7.   கொழுந்து இலையை துவரம்பருப்புடன் துவட்டலாகச் செய்து உண்ண நீர் இறங்கும்,நீர்கடுப்பு, வீக்கம் போம்.
8.   நெருஞ்சில் இலையும், வேரையும் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து சர்க்கரை சேர்த்து அருந்த நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பு குணமாகும்.
9.   நெருஞ்சி விதை சூரணம் 9 பங்கு,வால்மிளகு,சிறுநாகப்பூ,வெடியுப்பு வகைக்கு 3பங்கு பொடித்து கலந்து 500-1000 மிலி கிராம் இளநீரில் கொடுக்க சிறுநீர் தாராளமாகப் போகும்.
10.  நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம்  காய்ச்சாத பாலில் குழைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் தழும்புகளின் மேல் தடவி காலையில் தேய்த்துக் கழுவ சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
11.  நெருஞ்சில் விதை 300 கிராம், கோதுமை 500 கிராம், கொத்த மல்லி 100 கிராம், சுக்கு 50 கிராம் ஏலம் 10 கிராம் சேர்த்து இளவறுப்பாக வறுத்து பொடி செய்து,கொதி நீரில் போட்டு காபி போல சர்கரை சேர்த்து அருந்த உடலுக்கு ஊட்டம் தரும். குளிர்ச்சி தரும். எதிர்ப்பாற்றல் பெருகும்.
12.  நெருஞ்சில் காயை அறுபத்தெட்டு கிராம், கொத்துமல்லி விதை எட்டு கிராம் , நீர் 500 மி.லி. சேர்த்து ஒரு சட்டியில் வார்த்து நன்கு காய்ச்சி வடித்து நாற்பது மி.லி. வீதம் அருந்த நீர் அடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு முதலிய நோய்கள் தீரும்.
13.  சமூலத்துடன் கீழாநெல்லிச் சமூலம் சமன் சேர்த்து மையாய் அரைத்து கழற்சிக் காயளவு எருமைத் தயிரில் கலந்து காலை, மாலை 1 வாரம் கொடுக்க நீர்த்தாரை எரிச்சல், வெள்ளை, நீரடைப்பு, மேகக்கிரந்தி, ஊறல் தீரும்.
14.  நெருஞ்சில் சமூலம் பத்து பங்கு, மூங்கிலரிசி ஐந்து, ஏலம் நான்கு, கச்சக்காய் நான்கு, ஜாதிக்காய் மூன்று, இலவங்கம் நான்கு, திரிகடுகு ஐந்து, குங்குமப்பூ சிறிது இவைகளை எடுத்து சட்டியிலிட்டு முறைப்படி குடிநீர்செய்து பணியிரெண்டு முதல் முப்பத்தைந்து மி.லி. அளவு அருந்தி வர, சூட்டைத் தணித்து நீர் எரிச்சலையும் மேக நோயின் தொடர்பாக ஏற்பட்ட ஆண்மைக் குறைவையும் நீக்கி, உடலுக்கு வன்மையை ஏற்படுத்தும்.
15.  சமூலச்சாறு 1 அவுன்ஸ் மோர் அல்லது பாலுடன் கொள்ள சிறுநீருடன் இரத்தம் போதல் குணமடையும்.
16.  பெரு நெருஞ்சில் காய் 250 கிராம், உளுந்து 100 கிராம், கருடன் கிழங்கு பொடி 200 கிராம், வாலுளுவை அரிசி 50 கிராம் சேர்த்து அரைத்து,ஒரு கிலோ பசு நெய்யில் வடையாகத்தட்டி போட்டு எடுக்கவும்,  காட்டுச் சீரகம், மிளகு வகைக்கு 100 கிராம் சேர்த்துச் சூரணித்து காலை, மாலை 5 மி.லி.மேற்படி நெய்யில் 5 கிராம் சேர்த்து சாப்பிட்டு,வடையைப் பாலில் அரைத்து மேல் பூச்சாக பூசி 2 மணி நேரம் கழித்து குளிக்க வெண் குட்டம் குணமாகும். நாட்பட்டதும் மேலும் பரவாமல் குணமாகும்.புகை, புலால், போகம், புளி தவிர்க்கவும்.
17.  சிறு நெருஞ்சில் இலைச் சாறு அரை லிட்டர்,கீழாநெல்லி இலை சாறு அரை லிட்டர் ஒன்றாய்க் கலந்து,கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும்.
18.  நெருஞ்சில் செடி இரண்டு, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராக காய்ச்சி 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.



ஆனைக்கற்றாழை Furcraea foetida (L)Haw;Agavaceae (Agave Americana)


                      ஆனைக்கற்றாழை                              Furcraea foetida (L)Haw;Agavaceae (Agave Americana)                                     
மாற்றுப் பெயர் ; இராக்காசி மடல்,இரயில் கற்றாழை                                 வளரியல்பு      ;பெரிய மடல்களையுடைய கற்றாழை இனம்.                இலைஅமைப்பு ;                                                                   பூ,காய் ;                                                                           மருத்துவ பாகம் ; மடல்,குருத்தின் கீழ் உள்ள கிழங்கு.                                 குணம்         ;   மூத்திரவர்த்தனகாரி,ருதுவர்த்தனகாரி,வியதாபேதகாரி,                           மலகாரி.                                                       தீர்க்கும் நோய்கள் ; 
    வெட்டுரணங் காயம் வீக்கமுறும் பல்வலியும்
     முட்டும் பிரமேகம் மோதுகின்ற கட்டிப்
      பிடிப்பகற்றும்  மாதே! பெரியவிராக் காசிச்
      செடிப்பயனை  யெல்லார்க்குஞ் செப்பு
 () இராக்காசிச் செடியினால் வெட்டுக்காயம்,வீக்கம்,பல்வலி,வெள்ளைகட்டி, மேகவாயுவினால் உண்டான பிடிப்பு முதலியவை குணமாகும்.
1.   மடலை வாட்டிப் பிழிந்த சாற்றில் போதுமான அளவு கேழ்வரகு மாவு அல்லது மூசாம்பர பொடி கலந்துகொதிக்க வைத்து வீக்கத்தின் மீது பற்றுப் போட கரையும்.
2.   50 கிராம் மடலுடன் 25 கிராம் நன்னாரி வேரைப் பொடித்துச் சேர்த்து 1லி நீரில் 250 மிலி யாகக் காய்ச்சி காலைமாலை 30 மிலி பருகிவர பாலியல் நோயான கொறுக்குப்புண் கிரந்தி ஆகியவை தீரும்.
3.   குருத்தின் கீழுள்ள மென்மையான கிழங்குப் பகுதியை எடுத்து சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட வெள்ளை குணமாகும்.
4.   வேர் 30 கிராம் நசுக்கி 4ல் 1ன்றாய்க் காய்ச்சி காலைமாலை 100மிலி பருகிவர சிறுநீர் தாராளமாக இறங்கும்.
5.   மடலை குழகுழப்பாகுமாறு துவைத்துக் கட்ட வலிகள் நீங்கும்.
6.   மடல் சாற்றை அடிபட்ட காயங்களின்மீது தடவ சீழ் பிடிக்காமல் ஆறும்.
7.   வேர்ப்பிசினை தேன் பதமாய்க் கரைத்து சொறி,சிரங்குகளுக்குத் தடவ ஆறும்.
8.   மடலைச் சீவி உள்ளிருக்கும் சதையை இலேசாக அரிந்து நோயுள்ள பாகங்களில் வைத்துக் கட்டக் குணமாகும்.
                                                                                                                                         

ஆற்றுத்தும்மட்டி Citrullus Cococynthis


                                                      ஆற்றுத்தும்மட்டி                                                                                             Citrullus Cococynthis                                        
மாற்றுப் பெயர்;குமட்டிக்காய்,வலிக்காம்பட்டிகாய்
வளரியல்பு       ;   தரையில் படர்ந்து வளரும் கொடி                                 பூ,காய் ;                                                                                     மருத்துவ பாகம் ;                                                                             குணம் ;     கிருமிநாசினி,விஷநாசகாரி,மலகாரி,மூத்திரவர்தனகாரி                   தீர்க்கும் நோய்கள்   ; இதனை தனியாக உள்ளுக்குக் கொடுப்பது இல்லை
   பற்றுதிரப் பூச்ச்சிகளைப் பற்பலவா மந்தத்தைச்
   சுற்றுதிரப் பித்தத்தை தூவிடத்தை – முற்று
   மரிக்குமட்டி யாயிலைமா தங்கருரை யன்றோ
   வரிக்குமட்டி யாயிலைமா தே   
() வரிக்குமட்டி இலை ரத்தக்கிருமிகள்,பலவிதமந்தம்,ரத்தப்பித்தம்,தசையைப் பற்றிய சர்ப்ப விஷம்,இவற்றை விரைவில் கெடுக்கும்.
    கிடையெங்கே சோம்பலெங்கே கேடுறச்செய் வாதக்
    கடையெங்கே யாற்றுக் கலிங்க – மடைதிறக்கி
    னண்டை யடைச்சலெங்கே ஆயிழையார் சூதகத்தி 
    னுண்டை யுடைசலெங்கே யோது.               
() ஆற்றுத்தும்மட்டிக்காயால் கீல் பிடிப்பால் நடையின்றிக் கிடத்தல்,சோருதல், மலாவிருத முதலிய வாத ரோகங்கள்,கருப்பையைப் பற்றியடைகின்ற ஆமம்,இரத்தக் குன்மக்கட்டி, அகால ருது இவை போம்.
1.   விஷாமுர்த சூரணம்;சிறு தும்மட்டிக்காய்,பேய்ச்சுரை,பேய்ப்புடல்,பேய்ப் பீர்க்கு இவற்றின் சமூலம் சமன் பொடித்து வேளைக்குத் திரிகடி வெந்நீரில் அந்திசந்தி கொடுத்துவர சகல விஷ்ங்களும் முறிந்துவிடும்.
2.   காய் மேல் தோல்,விதை நீக்கிப் பிழிந்தசாறு, ஆவின்பால் வகைக்கு 1 படி,சுத்தமான தேங்காய்பால் கால் படி,சிற்றாமணக்கெண்ணை 1படி, வெங்காயச்சாறு 1படி,கலந்து, கடுகு, பூண்டு,இந்துப்பு,வளையலுப்பு, பாறையுப்பு, வெடியுப்பு,சவுட்டுப்பு,கடுக்காய், கடுகுரோகிணி, அதிமதுரம், சுக்கு,மிளகு,திப்பிலி, ஓமம்,வாய்விளங்கம்,சீரகம்,சிற்றரத்தை,கோஷ்டம், சிறுநாகப்பூ, சன்ன லவங்கப் பட்டை  வகைக்கு 5 கிராம்  மேற்படித் திரவங்களில் ஏதாவதொன்றிலரைத்துக் கலந்து தைலம் வடித்து,காலை 15மிலி 3-5 நாள் கொடுக்க வாதநீர்,கிருமிகள், ஈரல்களின் வீக்கம்,நீர்க்கோவை,பெறும்வயிறு, இடுப்பு வலி, கீல்வாயு,ருதுசூலை தீரும். (சுமார் 4-5 பேதியாக வேண்டும். இல்லையெனில் அளவைக் கூட்டியோ குறைத்தோக் கொடுக்க வேண்டும்.)
3.   ஒரு பழகிய பாண்டத்தில் 3 படிஆவின் நீர் விட்டு, இந்துப்பு,வளையலுப்பு, பாறையுப்பு, வெடியுப்பு,சவுட்டுப்பு வகைக்கு 40 கிராம் அரைத்துப் போட்டு,சிறு தீயில் எரித்து குழம்பு பதம் வரும்போது, பெரிய தும்மட்டிக்காய் 50ல் தோல், விதை நீக்கிப் பிழிந்த சாறு கலந்துக் கிளறி மெழுகுப் பதத்தில் எடுத்து, அந்தி சந்தி சுண்டைக்காய் அளவு கொடுத்துவர உதர ரோகத்தைக் குறிப்பிடும் படியான பெருவயிறு,மகோதரம், நீராம்பல், நீர்க்கோவை, கவுசி,கெண்டை, பீலிகை முதலிய நோய்கள் நிவர்த்தியாகும்.
4.   காயை இரண்டாக வெட்டி உப்பில் தோய்த்து அழுத்தித் தேய்க்க புழுவெட்டு நீங்கி முடி முளைக்கும்.

ஆற்றலரி Polyganum Barlatum

                                                    ஆற்றலரி                          Polyganum Barlatum 

மாற்றுப்பெயர்                                                                     வளரியல்பு ;                                                                                  இலைஅமைப்பு ;                                                                              பூ,காய் ;                                                                                  மருத்துவ பாகம் ;                                                                            குணம் ;          சங்கோசனகாரி,உதரவாதஹபகாரி                                       தீர்க்கும் நோய்கள்                                                                                                                                          
      வெப்பந் தணியுமே வெய்யபுண் ணாறுமே
      வெப்பமதி சார மொழயுமே – செப்பக்கேள்
      தோற்று முந்திவலித் தொல்லை யகலுமே
      ஆற்றலரிப் பூண்டா லறி         
()  ஆற்றலரியால் தேகத்திலுள்ள கொதிப்பு,சிரங்கு,உஷ்ணபேதி,குன்மவலி முதலியவை குணமாகும்.
  1. இலை,காம்பு கசாயமிட்டு விரணங்களைக் கழுவ ஆறும்.
  2. விதையைப் பால் விட்டரைத்து சாப்பிட வயிற்றுவலி,வயிற்றுப் பிடுங்கல் நிவர்த்தியாகும்
வேர்க் கசாயம் பருக தேகம் குளிர்ச்சியடையும்

ஆளி விதை Lepidium Sativum


                        ளி விதை                                                                                                  Lepidium Sativum         
  மாற்றுப்பெயர் ;                                                      வளரியல்பு ;                                                                 இலைஅமைப்பு ;                                                             பூ,காய் ;                                                              மருத்துவ பாகம் ;                                                            குணம் ;அந்தர்ஸ்நிக்தகாரி,இளகுமலகாரி,மூத்திரவர்தனகாரி,       வியதாபேதகாரி,பலகாரி,காமவிர்தினி                                                                                                                                                         தீர்க்கும் நோய்கள்
  வீக்க மதிவாந்தி மேனி வலிவாய் வுந்
  தூக்குநரம் பின்குத்த றெல்லழலை – யோக்காள
  மீளி யருசி விரைவாதமும் போகு
 மாளிவிதை தன்னா லறி                                                     
()ஆளி விதையினால் சோபை,மிகுவமனம்,உடற்கடுப்பு,வாதவலி, நரம்புசூலை, அஸ்திச்சூடு,ஓக்காளம்,அருசி,பீஜவாயு இவை நீங்கும்.
1.   இதனை சிறு மண் கலயத்தில் பொட்டு சிறுப்தீயில் எரித்து நன்கு வெந்ததும் வடித்து,சலத்தை நீக்கி தே,எண்னைவிட்டுக் கடைந்து சீலையில் தடவி வயிறு,மார்பு முதலான இடங்களில் காணும் சகல நோய்களுக்கும் மேலே போட்டுக் கட்ட குணமாகும்.
2.   எலுமிச்சம்பழச்சாற்றிலாவது,குளிர்ந்த சலத்திலாவது அரைத்துக் களி போல் கிளரி சீலையில் கனமாகத் தடவி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட உடைத்துக் கொள்ளும்.
3.   200 கிராம் விதையை 2 படி தண்ணீரில்  மலர வேகவைத்து வடித்து கஞ்சியுடன் கிலோ சீனி சர்க்கரை சேர்த்து சர்பத் போல் காய்ச்சி, தேவைக்கு சிறிது நீரில் கலந்து 2 வேளை பருக குளிர்ச்சியைப் பற்றிய இருமலையும்,இரத்த வாந்தியையும் குணப்படுத்தும்.மலம் இளகலாகப் போகும்.குடலைச் சுத்தப் படுத்தி வாயுவைக் கண்டிக்கும்.
4.   இச் சர்பத்துடன் 3-5 துளி சுத்தமான சந்தன அத்தர் கலந்து கொடுக்க பிரமேகம் குணமாகும்.நீர்த் தாரையில் கண்ட விரணம் ஆறி அதனில் கண்ட கசிவு நீங்கும். 
 

ஆள்வள்ளிக் கிழங்கு Jatropha Manihot

                 ள்வள்ளிக் கிழங்கு                                            Jatropha Manihot                       
மாற்றுப்பெயர் ; மரவள்ளிக் கிழங்கு ,பெருவள்ளிக் கிழங்கு,            வளரியல்பு ;                                                                  இலைஅமைப்பு ; விரல் போன்ற அகன்ற இலைகள்                     பூ,காய் ;                                                                       மருத்துவ பாகம் ; கிழங்கு                                                   குணம் ;    பலகாரி                                                           தீர்க்கும் நோய்கள்
   வாதகபம் பித்தமொடு மாமூலம் வாதகுன்ம
   மோதுபல நோய்மந்த முண்டாகும் – போதின்
   மருவள்ளிக் கொண்டகுழன் மாதே! யுலகிற்
   பெருவள்ளி யின்கிழங்காற் பேசு.
() பெருவள்ளிக் கிழங்கு என்று கூறப்பட்ட ஆள்வள்ளிக் கிழங்கால் திரிதோஷ தொந்தம்,வாதமூலம்,வாதகுன்மம் முதலிய சில நோய்களும், அக்கினி மந்தமும் உண்டாகும்.
     பித்தங் கலந்த பெருவாயு வைக்கூவு
     மெத்தஅனல் மந்தத்தை மேலெலுப்புஞ் – சுத்த
     இரவள்ளிக் கொண்டகு ழலேந்திழையே! யிந்த
     மரவள்ளிக் கந்தமென வை
()மரவள்ளிக்கிழங்கு பயித்திய வாததொந்தத்தையும்,அக்கினி மந்தத்தையும் உண்டாக்கும். 
1.   நெருப்பில் சுட மாவாகும்.இத்துடன் தேன் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.
2.   இதனைச் சுத்தம் செய்து நன்றாக வேக வைத்து மேல் தோல் நீக்கி தேங்காய் சேர்த்து உண்பதுண்டு. அன்றியும் வேகவைத்து மேல் தோல் நீக்கி துருவி சர்க்கரை,ஏலம்,தேங்காய் துருவல் சேர்த்து உண்பார்கள். இதனால் தாது விருத்தியுண்டாகும். நாவிற்கு ருசி தரும். ஆனால் மலங்கட்டும்.அக்கினி மந்தம் உண்டாகும்.தேங்காய் சேர்வதால் பெரும்பாலும் கெடுதல் செய்யாது.

1.   ஈஇ
2.    

ஆவாரை Cassia Auriculata L;Caesalpinioideae


                                         ஆவாரை                                                            Cassia Auriculata L;Caesalpinioideae
ஆவாரைப்  பூத்திருக்க  சாவாரைக்  கண்ட து ண்டோ
                                        -  பழமொழி -                                 வளரியல்பு ; குறுஞ்செடி                                                           இலை ;                                                   
பூ,காய் ; பளிச்சிடும் மஞ்சள் நிறப்பூ,தட்டையான காய்                                 செய்கை ; சமனகாரி,சங்கோசனகாரி,விதை காமவர்தினி                                மருத்துவ பாகம் ; சமூலம்                                                        மருத்துவ குணம்;                                                                               ஆவாரை இலை,பட்டை (CassiaAuriculata Leaves & Bark)                  சொல்லுதற்குமட்டோ தொலையாத மேகநீ                                        ரெல்லாமொழிக்கு மெரிவகற்று –மெல்லவச                                          மாவாரைப் பம்பரம்போ லாட்டுந் தொழிலணங்கே                                       யாவாரை மூலியது
()ஆவாரைச் செடியானது சர்வ பிரமேக மூத்திர ரோகங்களையும்,ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.                  
                ஆவாரம்பூ(Cassia Auriculata Flower);      
 தங்கமேனவே சடத்திற்கு காந்தி தரு                          
 மங்காத நீரை வறட்சிகளை – யங்கத்தா                            
 மாவைக் கற்றாழை மணத்தை யகற்றிவிடும்                                    
 பூவைச் சேராவாரம் பூ
()ஆவாரம்பூ பிரமேக நீர்,வறட்சி,உடம்பிற்பூத்த உப்புமா,கற்றாழை நாற்றம் இவற்றை நீக்கும்.தேகத்திற்குப் பொற்சாயலைத் தரும்.                        
             ஆவாரை பிசின்(CassiaAuriculata Gum);                                         பெருநீர் மறிக்கும் பிரமேகம் போக்கும்                                                வருநீர்ச் சுருக்குதனை மாற்றுந் –தருநீர்மை                                      பூணுமே னிக்கமலப் பொன்னே பிடகரெலாம்                                         பேணுமே காரிப் பிசின்                                                              ()ஆவாரைச் செடியின் பிசினானது வெகுமூத்திரத்தையும்,பிரமேகரோகத்தையும், வாதகிரிச்சரத்தையும் போக்கும்.                                                             
               "மோகத்தினாலே விளைத்த சலம் வெட்டையனல்               
                ஆகத்தின் பிண்ணோ டருங்கிராணி- போகத்தான்                                        ஆவாரைப் பஞ்சகங் கொள் அத்தி சுரம் தாகமும் போல்                                எவாரைக் கண்மடமாதோ?"
                                - ( பதார்த்த குண விளக்கம் )-  
  1. பூவை நன்றாய் அலம்பி பச்சைப் பயறுடன் ,கூட்டி பாகப்படி கூட்டமுது செய்து உண்ண மது மூத்திரம், இரத்த மூத்திரம், பெரும்பாடு,உட்காங்கை , தாகம்  இவைகள் போகும்
  2. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து காபி போல் கலந்து காலை, மாலை பருகிவர உட்சூடு,நீரிழிவு,நீர்க்கடுப்பு குணமாகும்.
  3. பூ இதழ் வதங்கி(வாடி) வரும் சமயம் எடுத்து  இரண்டு எடைசீனாக் கற்கண்டு போட்டு ஆட்டி வழித்து எடுக்க குல்கந்து போலிருக்கும் , இத்துடன் போதிய அளவு தேன் கூட்டி கலந்து  பிசைந்து சில தினம் ரவியில் வைத்து வேளைக்கு10 கிராம்,தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வர அதிக நன்மையைத் தரும் .
  4. பூவை உலர்த்தி வேளைக்கு 10 கிராம் கியாழமிட்டு பால் சர்க்கரை கூட்டி  காப்பி போல் சாப்பிட நீரிழிவு,உட்சூடு,நீர்க்கடுப்பு,முதலியவை குணமாகும்.
  5. பூவை உலர்த்தி நலுங்கு மாவுடன் கூட்டி தேய்த்து ஸ்நானம் செய்து வர கற்றாழை நாற்றம்,உடம்பில் உப்பு பூத்தலை நீக்கும்.உடல் மினுமினுக்கும்.
  6. ஆவாரம் பட்டை 20 கிராம் நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு முக்கால் படி நீர்விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து, வீசம் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி, தினம் இரு வேளை 50 மிலி வீதம் கொடுத்து வர மதுமேகம் (சர்க்கரை நோய் ),ரத்தமூத்திரம்(ரத்த வெட்டை), பெரும்பாடு,தாகம் இவைகள் போகும் .
  7. ஆவாரைப் பஞ்சாங்க சூரணம்(இலை,பூ,பட்டை,வேர்,காய் வகைக்குசமன்) 250 கிராம், கடலழிஞ்சில்பட்டை,மருத மரப்பட்டை,நாவல் மரப்பட்டை,தண்ணீர் விட்டான் கிழங்கு,பாதிரி வேர்,வகைக்கு 80 கிராம்,மரமஞ்சள்,கல்நார் வகைக்கு 40கிராம்,குரோசாணி ஓமம் 10கிராம்,இடித்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு,வேண்டும் போது வேளைக்கு 20 கிராம் சூரணத்தை கால் படி நீரில் அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் 2 வேளை சிறிது சர்க்கரை கூட்டிப் பருகி வர மதுமேகம்(சர்க்கரை நோய்),தேககாங்கை (சர்க்கரை நோயாளர்களுக்கான உடல் , கை கால்களில் ஏற்படும் எரிச்சல்),தாகம், முதலியவை நீங்கும்.தேவை என்றால் பசும் பால் கூட்டிக் கொள்ளலாம்.
  8. நன்கு சுத்தம் செய்த எள் 400கிராம்,வேர் பட்டை சூரணம்,வறுத்த கடலை மாவு வகைக்கு 200கிராம்,கலந்து தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து இடித்து இலேகியம் செய்து நெல்லிக்காயளவு,காலைமாலை சாப்பிட்டு வர தாகம்,அழலை,நீரிழிவு போன்ற பல பிணிகள் தீரும்.
  9. பிசின் 2-3 குன்றி எடை தினம் 2 வேளை 20-40 நாள் பசும்பாலில் சாப்பிட்டுவர விந்து நஷ்டம்,மதுமேகம்,தாகம்,உட்காங்கை தீரும்.
  10. பட்டையை உலர்த்திப் பொடித்து 20கிராம்,1 லிட்டர் நீரிலிட்டு 200மி.லியாகக் காய்ச்சி அந்தி சந்தி குடித்து வர மதுமேகம்,சிறுநீருடன் ரத்தம் போதல், பெரும்பாடு தீரும்.
  11. ஆவாரைப் பஞ்சாங்க சூரணம் 10கிராம் தினம் காலை மதியம்,மாலை  வெந்நீருடன் சாப்பிட மதுமேகம்,பிரமேகம்,உடல் மெலிவு, உடல் எரிச்சல், வேதனை,மூச்சுத் திணறல் ஆகியன குணமாகும்.1-3 மண்டலம் சாப்பிட வேண்டும்.
  12.  பூவை இரவு ஒரு தம்ளர் நீரில் போட்டு காலை வெறும் வயிற்றில் அதன் தெளிவைக் குடித்து வர சொறி, சிரங்கு, தேமல் போன்ற துன்பங்கள் போகும்
  13. பிசின் 3 கிராம் 1 தம்ளர் நீரில் இட்டு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து தினம் இருவேளை குடித்து வர வெள்ளைப் போக்கு குணமாகும். வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவை குணமாகும்.
  14. பட்டை,கஸ்தூரிமஞ்சள்,1 மிளகாய்,சிறிது சாம்பிராணி,நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி(ஆவாரைத் தைலம்) தலைமுழுகிவர மதுமேகத்தாலுண்டான தோல் வெடிப்பு,தோல்வறட்சி,எரிச்சல் குணமாகும்.                           
  15. இலையோடு உளுந்த மாவை சேர்த்து அரைத்து மூட்டு வீக்கம், வலி ஆகியவற்றுக்குப் பற்றாகப் போட வீக்கம் தணிந்து வலியும் போகும்
  16. . 20கிராம்  ஆவாரம் பட்டையை  பொடித்து  5ல்1ன்றாய்க் காய்ச்சி,50மிலி தினமிருவேளை  பருகிவர  பெரும்பாடு  கட்டுப்படும்
  17.  
ஆவாரையில் "சென்னா பிக்ரின்'' எனப்படும் "கார்டியாக் குளூகோசைட் மற்றும் "ஆன்த்ரா குனைன்ஸ்'', "டேனின்ஸ்'' ஆகிய வேதிப் பொருள்களை உள்ளடங்கி உள்ளது.
பல்வேறு நோய்களுக்கும் காரணமான "ஸ்டேப்பிலோகக்கஸ் ஆரியஸ்'', "என்டரோ காக்கஸ் "பீக்காலிஸ்'', "பேச்சிலஸ் சப்டிலிஸ்''.சால்மோனில்லா டைபி'', "சால் மோனில்லா பேரா டைப்பி'', "விப்ரியோ காலரே'', "சைஜில்லா டிசன்ட்ரோ'' போன்ற நோய்க் கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் மருத்துவ வேதிப் பொருள்கள் உள்ளன.