இதன் இலைகள் பித்த நரையை போக்கவல்லவை. தொடர்ந்து துவையல் அல்லது கஷாயமாக உட்கொள்ள நரைமயிர் கருக்கும். இளமையைக் கொடுக்கும். முத்தெருக்கஞ்செடி என்றும் சொல்வார்கள். இலைச்சாறுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்குக்கு தடவலாம்.இதன் வேரை 5கிராம் எடுத்து பால்விட்டரைத்து இருவேளை குடிக்க கரப்பான், பரு, சிறுகட்டிகள் நீங்கும். பெண்களுக்கு மார்பகம் வளர்ச்சி பெறும்.